என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கும்பமேளா
நீங்கள் தேடியது "கும்பமேளா"
உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu
அமராவதி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறியதாவது:-
துப்புரவு தொழிலாளர்கள் 4 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றனர். ஒரு முறை கூட மோடி இவ்வாறு செய்யவில்லை. தற்போது தேர்தலை நினைவில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செலுத்துகிறார். இந்த செயலினால் மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என தெரிகிறது.
தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார். மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.
மேலும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே எவ்வித பாகுபாடுமின்றி பணி புரிகின்றனர் என மோடி பாராட்டினார். அத்துடன் அவர்களுக்கு அங்கவஸ்திரமும் அணிவித்து கவுரவித்தார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியது. மோடியின் இந்த செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறியதாவது:-
துப்புரவு தொழிலாளர்கள் 4 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றனர். ஒரு முறை கூட மோடி இவ்வாறு செய்யவில்லை. தற்போது தேர்தலை நினைவில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செலுத்துகிறார். இந்த செயலினால் மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என தெரிகிறது.
தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார். மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu
உ.பி.யில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியதுடன், புனித நீராடி கங்கா ஆரத்தி செய்தார். #KumbhMela #PMModi
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு, துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புனித நீராடிய அவர், கங்கை ஆற்றுக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டார். #KumbhMela #PMModi
காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. #PulwamaAttack #KumbhMela
பிரயாக்ராஜ்:
அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். #PulwamaAttack #KumbhMela
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். #PulwamaAttack #KumbhMela
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை புனித நீராட உள்ளார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். #KumbhMela #BJP #AmitShah
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை புனித நீராட உள்ளார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். #KumbhMela #BJP #AmitShah
மராட்டிய மாநிலத்தில் பிடிபட்ட 9 பயங்கரவாதிகள் கும்பமேளா பக்தர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #ISMilitants
மும்பை:
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தலைநகர் டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க இந்தியாவில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இரு வாரங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தேசிய விசாரணை குழுவினர் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு புதிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசவேலைகளில் ஈடுபட தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கூண்டோடு சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, மும்பை நகரங்களிலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர் மொகீன்கான், சல்மான்கான், தகீன்கான், பகத்ஷா, ஜமீன்குத்படி, முகமது மாசார்ஷேக், சர்ப்ரஷ் அகமது, ஜாகித் ஷேக் என்று தெரிய வந்தது. மற்றொருவர் 17 வயதான மைனர் ஆவார். இவர்கள் அனைவரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 9 பேரில் 4 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் மும்புரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள், விஷ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. விஷப்பாட்டில்கள்தான் அதிக அளவில் இருந்தன.
அவர்கள் 9 பேரையும் மும்பை போலீசார் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்தது.
அதோடு உத்தரபிரதேச மாநிலத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட சதி திட் டம் தீட்டி இருந்தது அம்பலமானது. இதையடுத்து அவர்களில் 8 பேர் அவுரங்காபாத் கோர்ட்டில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. 17 வயது இளைஞர் மைனர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்தக்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளா புனித நீராடலை சீர்குலைக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் விஷப்பாட்டில்களை அதிகளவில் வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கும்பமேளாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகிறார்கள். மார்ச் மாதம் வரை இந்த கும்பமேளா நடக்கிறது. இடையில் ஏதாவது ஒருநாள் கும்பமேளா பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீரில் விஷத்தை கலந்து அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்து இருந்தனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் பணம் மற்றும் பொருட்களை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பின்னால் இருந்து இயக்கியது யார் என்பது பற்றிய விசாரணையை மும்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். #ISMilitants
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தலைநகர் டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க இந்தியாவில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இரு வாரங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தேசிய விசாரணை குழுவினர் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.
அப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு புதிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசவேலைகளில் ஈடுபட தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கூண்டோடு சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, மும்பை நகரங்களிலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர் மொகீன்கான், சல்மான்கான், தகீன்கான், பகத்ஷா, ஜமீன்குத்படி, முகமது மாசார்ஷேக், சர்ப்ரஷ் அகமது, ஜாகித் ஷேக் என்று தெரிய வந்தது. மற்றொருவர் 17 வயதான மைனர் ஆவார். இவர்கள் அனைவரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 9 பேரில் 4 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் மும்புரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள், விஷ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. விஷப்பாட்டில்கள்தான் அதிக அளவில் இருந்தன.
அவர்கள் 9 பேரையும் மும்பை போலீசார் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்தது.
அதோடு உத்தரபிரதேச மாநிலத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட சதி திட் டம் தீட்டி இருந்தது அம்பலமானது. இதையடுத்து அவர்களில் 8 பேர் அவுரங்காபாத் கோர்ட்டில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. 17 வயது இளைஞர் மைனர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
பிடிபட்டுள்ள 9 பேரும் 3 குழுக்களாக பிரிந்து நாச வேலையில் ஈடுபட தயாராகி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக குடியரசு தின விழாவில் கைவரிசை காட்ட அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கும்பமேளாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகிறார்கள். மார்ச் மாதம் வரை இந்த கும்பமேளா நடக்கிறது. இடையில் ஏதாவது ஒருநாள் கும்பமேளா பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீரில் விஷத்தை கலந்து அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்து இருந்தனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் பணம் மற்றும் பொருட்களை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பின்னால் இருந்து இயக்கியது யார் என்பது பற்றிய விசாரணையை மும்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். #ISMilitants
பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நாளில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடினர். #KumbhMela
பிரயாக்ராஜ் :
6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கோலாகலமாக தொடங்கியது.
இது மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சாகாவரம் பெற்ற அமிர்தத்தின் துளிகள், வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் (பானை) இருந்து அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய 4 இடங்களில் விழுந்தது என்பது இந்து மக்களின் நம்பிக்கை.
அந்த அமிர்தத்தின் துளிகள் விழுந்த இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
அந்த வகையில் பிராயக்ராஜ் நகரில் (அலகாபாத்) நடக்கிற கும்பமேளா மிகவும் பிரபலமானது. உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் இங்கு வந்து புனித நீராடுவதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.
பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியபோது, முதல் நாளில் லட்சக்கணக்கான சாமியார்கள், வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.
முதல் நாள் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் பக்திப்பெருக்குடன் புனித நீராடுவது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவை கண்டு செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநில அரசு, கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்த கும்பமேளாவில் பவுஷ் பூர்ணிமா (வரும் 21-ந் தேதி), மவுனி அமாவாசை (பிப்ரவரி 4-ந் தேதி), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 10-ந் தேதி), மாகி பூர்ணிமா (பிப்ரவரி 19-ந் தேதி), மகாசிவராத்திரி (மார்ச் 4-ந் தேதி) முக்கிய நாட்கள்.
இந்த நாட்களில் பக்தர்கள் கடலென திரண்டு வந்து திரிவேணி சங்கமத்தில் சங்கமிப்பார்கள். கும்பமேளாவையொட்டி இந்த நகரில் மக்களுக்கு 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியவைதான் அந்த 6 மொழிகள் ஆகும்.
ஜனாதிபதி செல்கிறார்
பிரயாக்ராஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) காந்திய எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். #KumbhMela
6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கோலாகலமாக தொடங்கியது.
இது மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சாகாவரம் பெற்ற அமிர்தத்தின் துளிகள், வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் (பானை) இருந்து அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய 4 இடங்களில் விழுந்தது என்பது இந்து மக்களின் நம்பிக்கை.
அந்த அமிர்தத்தின் துளிகள் விழுந்த இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
அந்த வகையில் பிராயக்ராஜ் நகரில் (அலகாபாத்) நடக்கிற கும்பமேளா மிகவும் பிரபலமானது. உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் இங்கு வந்து புனித நீராடுவதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.
பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியபோது, முதல் நாளில் லட்சக்கணக்கான சாமியார்கள், வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.
முதல் நாள் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் பக்திப்பெருக்குடன் புனித நீராடுவது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவை கண்டு செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநில அரசு, கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்த கும்பமேளாவில் பவுஷ் பூர்ணிமா (வரும் 21-ந் தேதி), மவுனி அமாவாசை (பிப்ரவரி 4-ந் தேதி), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 10-ந் தேதி), மாகி பூர்ணிமா (பிப்ரவரி 19-ந் தேதி), மகாசிவராத்திரி (மார்ச் 4-ந் தேதி) முக்கிய நாட்கள்.
இந்த நாட்களில் பக்தர்கள் கடலென திரண்டு வந்து திரிவேணி சங்கமத்தில் சங்கமிப்பார்கள். கும்பமேளாவையொட்டி இந்த நகரில் மக்களுக்கு 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியவைதான் அந்த 6 மொழிகள் ஆகும்.
ஜனாதிபதி செல்கிறார்
பிரயாக்ராஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) காந்திய எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். #KumbhMela
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா திருவிழாவையொட்டி மகர சங்கராந்தி தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பரவசமடைந்தனர். #Hinduseers #SangamGhat #holydip #KumbhMela
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவை நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர்.
வரும் மார்ச் மாதத்தில் நிறைவடையும் இந்த கும்பமேளா காலத்தில் 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த 28 துறை அதிகாரிகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகளும் பல மாதங்களாக திட்டமிட்டும் கண்காணித்தும் செய்து வந்தனர்.
கும்பமேளாவுக்காக திரளும் பக்தர்களுக்காக 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கங்கையாற்றங்கரையில் ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது.
32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக நகரத்தில் பல பெரிய நகரங்களில் உள்ளதுபோல் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை இங்கு அமைக்கப்பட்டன.
50 நாள் விழாவாக நடக்கும் இந்த அர்த கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 4200 கோடி ரூபாய் செலவிடுகிறது. நாட்டில் உள்ள 13 சாதுக்கள் அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் இவ்விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்து சேர்ந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஜீவநதிகள் சங்கமமாகும் 'திரிவேணி சங்கமம்' பகுதியில் புனித நீராடி (ஷாஹி ஸ்நானம்) பக்தி பரவசம் அடைந்தனர். #Hinduseers #SangamGhat #holydip #KumbhMela
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புனித நீராடுகிறார். #Congress #RahulGandhi #KumbhMela
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி தொடங்கும் இந்த கும்பமேளா மார்ச் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 கோடி பேர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராட இருப்பதால் பா.ஜனதாவும், காங்கிரசும் அவர்களை கவருவதற்காக இப்போதே ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து அவர்கள் ஆதரவை பெற வியூகம் வகுத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,200 சேவா தள தொண்டர்களை களம் இறங்கி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருகிறது. தினமும் 5 ஆயிரம் உதவி பொருட்களை பக்தர்களுக்கு கொடுக்க காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) அவர் கும்பமேளா புனித நீராடலை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் உத்தரபிரதேச வாக்காளர்களை கவர முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். #Congress #RahulGandhi #KumbhMela
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி தொடங்கும் இந்த கும்பமேளா மார்ச் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 கோடி பேர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராட இருப்பதால் பா.ஜனதாவும், காங்கிரசும் அவர்களை கவருவதற்காக இப்போதே ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து அவர்கள் ஆதரவை பெற வியூகம் வகுத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,200 சேவா தள தொண்டர்களை களம் இறங்கி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருகிறது. தினமும் 5 ஆயிரம் உதவி பொருட்களை பக்தர்களுக்கு கொடுக்க காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) அவர் கும்பமேளா புனித நீராடலை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் உத்தரபிரதேச வாக்காளர்களை கவர முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். #Congress #RahulGandhi #KumbhMela
உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. #KumbhMela
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela
உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #KumbhMela #UPGovt #YogiAdityanath
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன.
அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #KumbhMela #UPGovt #YogiAdityanath
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன.
அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #KumbhMela #UPGovt #YogiAdityanath
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X