search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "greetings"

    • இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது.
    • சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    கடலூர்:

    மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவினர் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கின்றனர்.

    இப்பயணக்குழு இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தை கடலூர் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ரோட்டரி சங்க பிறையோன், கருணாகரன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர், வண்ணமலர்களால் சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில், குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
    • ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.


    கடலூர்:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .

    • எவரெஸ்ட் சிகரம் ஏறும் பெண்ணுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
    • தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ள இவருக்கு, மாணிக்கம் தாகூர்

    எம்.பி. வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது.

    கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்பத்தூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 விநாடியில் இறங்கி சாதனை படைத்தீர்கள்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளீர்கள்.

    தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரியது.

    இன்று 10-வது நாள் மலையேறும் பயணம் மேற்கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்விக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈஸ்டர் தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.

    கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    • 2022-2023-ம் ஆண்டு பொதுமக்களிடம் சிறந்த சேவை புரிந்தமைக்காக சங்க பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • நடப்பு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்ட, மாநில அளவில் சிறந்த சங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாநில அளவில் சிறந்த கடன் சங்க செயல்பட்டு மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான கேடயத்தை கூட்டுறவு அமைச்சர் வழங்கினார்.

    இந்நிலையில் 2022-2023-ம் ஆண்டு கடன் வழங்கல், வைப்புத் தொகை பெறுதல் மற்றும் பொதுமக்களிடம் சிறந்த சேவை புரிந்தமைக்காக சங்க பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் மற்றும் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன் தலைமை தாங்கி சங்க செயலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் கவுரவித்து பரிசு மற்றும் இனிப்பு வழங்கினார். சங்க மேலாளர் சுடலைமுத்து வரவேற்றார். இதில் நடப்பு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என உறுதி எடுத்தனர். இதில் சங்க பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலர் எட்வின் தேவாசீர்வாதம் நன்றி கூறினார்.

    • கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
    • கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    காரைக்குடி

    காரைக்குடி வித்யாகிரி பள்ளி குழுமம் சார்பில் செஸ் போட்டியில் இந்திய அளவில் 79, தமிழ்நாடு அளவில் 28-வது இடம் பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர் பிரனேசுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் குழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, பள்ளிக்குழும தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகம்மது மீரா முன்னிலை வகித்தனர்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் போல் திகழ்வதற்கு, தனித்திறமைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக சிறுவயதில் இருந்து செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020ல் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.

    அதனைத்தொடர்ந்து, ஸ்வீடனில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் போட்டியில் பிரனேஷ் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின்

    79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின்

    28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

    இனிவரும்கா லங்களிலும் பிரனேஷ் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொ ணர்வதற்கு அடிப்படையாக இருந்த செஸ் கழக அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வித்யாகிரி பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் கடின பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, உறுதுணையாக இருந்து விடாமுயற்சியுடன் உலக சாதனை படைக்க செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக உள்ளனர்.

    உலக அளவில் மொத்தம் 2,000 கிராண்ட் மாஸ்டர்கள் தான் உள்ளனர்.ஆனால் பிரனேஷ் தனது 16 வயதில் வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.இவரை போன்று பல்வேறு மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து உருவாக வேண்டும்.கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர் பிரனேசுக்கு வித்யாகிரி கல்வி குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் பழ.படிக்காசு, செஸ் கழக தலைவர் கருப்பையா, செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஹேம மாலினி சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    • கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மதுரை பேராயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    மதுரை

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புத நாள். இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கது.

    இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம், உலகம் அறியும் உன்னத இடமாக மாறிப் போனது. மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சி மை பெற்றது. இயேசு இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்து விட்டால் நம் வாழ்வு புனிதமடையும். சமூக அவலங்கள் அகலும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்கு சவுக்கடி கிடைக்கும். தீவிரவாதம் வேரறுக்கப்படும்.

    புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால், புத்தாண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம். இறைவன் கொண்டு வந்த அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், ஏழை களுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை பகிர்வோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து, சமூக அநீதிகளை அகற்றி, பெண்மையை போற்றி, சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து, வாழ்வாங்கு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி ஊர்வலம் வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.

    பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.

    இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
    • வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள பனுவல் அரங்கில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா எழுதிய "பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதர்", "பவுத்தப் பண்டிகைகள்" என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

    கலைப்புல முதன்மையர் பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார்.

    அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.சிந்தனைச் செல்வன் நூலினை வெளியிட பாரத் கல்விக் குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் காமராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாட்டில் எதிர்பாராமல் இறப்பவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தெரிவித்துள்ளார்.
    • பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவானாது தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

    மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. அமீரகத்தில் மனித நேயத்திற்கான அங்கீகாரம் பெற்று கோல்டன் விசா பெற்ற கீழக்கரையை சேர்ந்த ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் கீழக்கரை வந்தார்.

    கீழக்கரை நகர்மன்ற அலுவலகத்தில் சேர்மன் செஹனாஸ் ஆபிதா, தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அஹமது, கீழக்கரை மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    முன்னதாக கீழக்கரை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் நகர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் கூறியதாவது:-

    அமீரகத்தில் அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்பு தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் ஆலோசனைையின் பேரில், அனைத்து சமுதாய மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து மக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்று வருகிறது.

    அமீரகத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போகும் தமிழ் தொழிலாளர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்துள்ளோம். இது தவிர மருத்துவ, கல்வி உதவியும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×