search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
    X

    நூல்கள் வெளியீட்டு விழா.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா

    • தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
    • வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள பனுவல் அரங்கில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா எழுதிய "பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதர்", "பவுத்தப் பண்டிகைகள்" என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

    கலைப்புல முதன்மையர் பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார்.

    அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.சிந்தனைச் செல்வன் நூலினை வெளியிட பாரத் கல்விக் குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் காமராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×