search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government hospital"

    • வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    • சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் பெருக்கத்தை தடுக்க செய்யும் கருத்தடை பணிகள் முடங்கி உள்ளன. இது நாய்கள் பெருக்கத்துக்கு ஓர் முக்கியக்காரணம்.

    புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சாலையில் நடந்து சென்றோர், வாகனத்தில் சென்றோர் என பலரையும் துரத்தி கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

    ரெட்டியார்பா ளையத்திலிருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்றது மேலும் 8 பேரை கடித்தது. இதில் மொத்தமாக 15 பேர் காயமடைந்து  நாய்கடி தடுப்பூசி போட்டனர்.

    இந்த நிலையில் இன்றுகாலை புதுவை நகராட்சி அமைந்துள்ள கம்பன் கலையரங்கம் அருகே நாய் ஒன்று பலரை விரட்டி கடித்துள்ளது. இதில் 6 பேர் வரை காயம் அடைந்தனர். அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 9 பேரை நாய் கடித்துள்ளது.

    காலை நாய் கடித்த 15 பேர் புதுவை அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்டு சென்றனர். இதனால் சாலைகளில் குழந்தைகளை தனியாக அனுப்ப பெற்றோர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • பொதுப் பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்தும் பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை பார்வையிட்டது டன், மருத்துவ பயன் பாட்டிற்கு உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வை யிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    • நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கலெக்டர், எம்,எல்.ஏ திடீர் ஆய்வு செய்தனர்.
    • பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக எக்ஸ்ரே பிரிவு மற்றும் ஜெனரேட்டர் வசதி குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், குறைகளை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

    அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.

    அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.

    இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

    இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது

    ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.

    குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

    ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.

    இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அதிகாரிகள் தகவல்
    • வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்றனர்

    வேலூர்:

    வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு பகுதியில் கடந்த மாதம் 20-ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

    அந்த குழந்தையை அங்குவிட்டு சென்ற பெற்றோர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

    அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அதனை விட்டு சென்ற பெண் குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. அதனால் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் சென்னையில் உள்ள தத்து நிறுவனத்திடம் குழந்தை வழங் கப்பட உள்ளது.

    இந்த குழந்தையின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்று குழந்தை பாது காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர்.
    • பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். அவர்களுக்கு கடைக்காரர் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தார்.

    பழச்சாறில் கலப்பதற்காக அவரிடம் ஐஸ் கட்டி இல்லை. எனவே ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் காணப்பட்ட சிலிக்கா ஜெல்லை பழச்சாறில் கலந்தார்.

    இந்த பழச்சாறை குடித்த 13 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிலிக்கா ஜெல் நச்சுத் தன்மையற்றது என்றாலும் அது கடுமையான வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 13 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தவறான ஐஸ் பயன்படுத்தியதால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. ஆனாலும் பீதியடைய தேவையில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வெளியில் பழச்சாறு உட் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் 4 பிரீசர் பெட்டிகள் உள்ளன. பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்கப்படும். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்து ரத்த வங்கி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. ஆனால் அதுபற்றி அறியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுபற்றி அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கர்ப்பிணிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொன்னேரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது, கொரோனா தொற்றின் போது இறந்த நர்சுகளின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு அறிகுறி

    இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    இதற்கிடையே மருத்துவ நல்வாழ்வு துறை சார்பில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படும் போது அதனை விரைந்து தடுப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.

    தனி வார்டு

    அதன் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறிய தாவது:-

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாகவும் காய்ச்சல் சிகிச்சை வார்டுகளில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் மருத்து வக்கல்லூரி டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

    இதில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்படும் நபர்க ளுக்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பாகவும், அவர்க ளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பாகவும் மருத்து வர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    120 படுக்கைகள்

    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப் பட்டுள்ளது. அந்த வார்டில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் வகையில் 120 படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக 60 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த படுக்கை வசதியில் தீவிர சிகிச்சைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் தனியாக 55 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற 5 படுக்கைகள் தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    காய்ச்சல் வார்டை தனியாக கண்காணிப்பு செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், குழு கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தொடர் கண்கா ணிப்பு பணியும் நடத்தப் பட்டு வருகிறது. தினமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதிலும் சுகாதார பணிகள் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொசு ஒழிப்பு பணிகளும் காலை, மாலை என 2 வேளைகளிலும் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலுக்கான தர மான மருந்துகள் கையிருப்பு அதிக அளவில் வைக்கப் பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு டெங்கு பரிசோதனை உட்பட 7 வகையான ரத்த பரிசோதனை மேற்கொள் ளப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்ட வர்களுக்கு தேவைப்படும் ரத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்புகள் வைக்கப் பட்டுள்ளது. எந்த நேரத்தி லும் யார் சிகிச்சை வந்தா லும் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் தயார் செய்யப் பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள னர்.

    காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ மனையை நேரில் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தனியாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம்.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களுக்கு 7 வகை யான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது யாருக்கும் கண்டறியப்பட வில்லை. கடந்த 2 தினங்க ளுக்கு முன்பு டெங்கு பாதிக் கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்றார்கள். அவர்களும் நல்ல முறையில் சிகிச்சை முடித்து நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி உள்ளனர்.

    மருத்துவமனையை சுற்றிலும் 320 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இங்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பாலசுப்பிர மணியன், துணை கண்காணிப்பாளர் முகமது ரபி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலர் காசி விஸ்வநாதன், புதூர் நகர செயலர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 த்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்வதுண்டு இந்நிலையில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்டசுற்று வட்டார பகுதிகளில் கொலை, தற்கொலை, சாலை விபத்து மற்றும் விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உடல்களை பாதுகாக்க மருத்துவமனையில் இரண்டு ப்ரிசர்பாக்ஸ் மட்டுமே உள்ளன.

    சில நேரங்களில் கூடுதலாக உடல்கள் வருவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பபடுகின்றன. இதனால் உறவினர்களிடையே கடும் வாக்குவாதம், பெரும் சிரமம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கூடுதலாக ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனையில் கூடுதலாக இருந்த ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு பிணவறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமள விஸ்வநாதன் தலைமை மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனி மருத்துவமனைக்கு கூடுதலாக உடற்கூறு ஆய்விற்கு சடலங்கள் வந்தால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×