என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஃப்ரீசர் பாக்ஸ்"
பொன்னேரி:
பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 த்திற்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்வதுண்டு இந்நிலையில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்டசுற்று வட்டார பகுதிகளில் கொலை, தற்கொலை, சாலை விபத்து மற்றும் விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உடல்களை பாதுகாக்க மருத்துவமனையில் இரண்டு ப்ரிசர்பாக்ஸ் மட்டுமே உள்ளன.
சில நேரங்களில் கூடுதலாக உடல்கள் வருவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பபடுகின்றன. இதனால் உறவினர்களிடையே கடும் வாக்குவாதம், பெரும் சிரமம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கூடுதலாக ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனையில் கூடுதலாக இருந்த ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டுவரப்பட்டு பிணவறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமள விஸ்வநாதன் தலைமை மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனி மருத்துவமனைக்கு கூடுதலாக உடற்கூறு ஆய்விற்கு சடலங்கள் வந்தால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்