search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையின் உரிய ஆதாரங்களை காண்பித்து பெற்று செல்லலாம்
    X

    குழந்தையின் உரிய ஆதாரங்களை காண்பித்து பெற்று செல்லலாம்

    • அதிகாரிகள் தகவல்
    • வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்றனர்

    வேலூர்:

    வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு பகுதியில் கடந்த மாதம் 20-ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

    அந்த குழந்தையை அங்குவிட்டு சென்ற பெற்றோர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

    அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அதனை விட்டு சென்ற பெண் குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. அதனால் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் சென்னையில் உள்ள தத்து நிறுவனத்திடம் குழந்தை வழங் கப்பட உள்ளது.

    இந்த குழந்தையின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்று குழந்தை பாது காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×