search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிடி ஸ்கேன்"

    • பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர்.
    • பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். அவர்களுக்கு கடைக்காரர் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தார்.

    பழச்சாறில் கலப்பதற்காக அவரிடம் ஐஸ் கட்டி இல்லை. எனவே ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் காணப்பட்ட சிலிக்கா ஜெல்லை பழச்சாறில் கலந்தார்.

    இந்த பழச்சாறை குடித்த 13 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிலிக்கா ஜெல் நச்சுத் தன்மையற்றது என்றாலும் அது கடுமையான வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 13 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தவறான ஐஸ் பயன்படுத்தியதால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. ஆனாலும் பீதியடைய தேவையில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வெளியில் பழச்சாறு உட் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் 4 பிரீசர் பெட்டிகள் உள்ளன. பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்கப்படும். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்து ரத்த வங்கி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. ஆனால் அதுபற்றி அறியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுபற்றி அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கர்ப்பிணிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொன்னேரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது, கொரோனா தொற்றின் போது இறந்த நர்சுகளின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×