என் மலர்
நீங்கள் தேடியது "mysterious fever"
- சிறுமி செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது.
- மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால் அதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் :
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர் மற்றும் கடும் பனி முடிவுக்கு வந்த நிலையில் சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இதேபோன்று சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ந்நிலையில் கடும் குளிர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கடலூர் வாசிகள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களால் சரிவர பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக அன்றாடம் கூலி வேலை பார்த்து சாப்பிடும் பாமர மக்கள் மற்றும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள்
இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள வயதானவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் இந்த மர்ம காய்ச்சலை முற்றிலும் தடுக்க உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஆங்காங்கே சேரும் குப்பைகளை அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும். குறிப்பாக நீண்ட நாட்களாக மழை நீர் மற்றும் கழிவு நீரால் குட்டைகளில் பல மாதங்களாக தேங்கியி ருக்கும் அசுத்தமான நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதி
- தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க அறிவுரை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குன்னத் தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் 4 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர்.
அவர்களில் 6 பெரியவர்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். குடிநீர், ரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர்.
பனிக்காலம் என்பதால் அனைவரும் தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
- காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
- விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மழைக்காலத்தினால் பரவும் காய்ச்சலை கட்டுப்ப டுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என மாவட்ட கலெக்டர் மோகன் இன்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்க ப்படும் சிகிச்சை உரிய முறையில் உள்ளதா என அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட பகுதி களை ஆய்வு செய்து, காய்ச்சலினால் சிகிச்சை பெறுபவர்கள், காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். சிகிச்சைக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்ததுடன், காய்ச்சல் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறியிருப்பதா து:-
விழுப்புரம் மாவட்ட த்தில் 13 வட்டா ரங்களில் 65 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையங்கள் த ற்போது மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றம காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் உடனடியாக அனைத்து தலைமை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு தேவை யான மருந்து மற்றும் மாத்திரைகள் அதிகமாக வைத்துக்கொள்ளவும், கூடுதலாக மருந்து, மாத்தி ரைகள் தேவை ப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் எவரு க்கேனும் காய்ச்சல் அறிகுறிகளான அதிகப்படியான உடல்வெப்பநிலை, வாந்தி, மயக்கம், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையினை அணுகி தேவையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும். மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட இருதய பாதிப்பு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தொடர்காய்ச்சல் அல்லது சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி முக்கவசம் அனிந்து செல்ல வேண்டும் எனவும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் பொதுஇடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த காய்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் தேவையான முன்னெ ச்சரிக்கை நடவடி க்கை எடுக்க ப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது, துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மருத்துவர்கள் மரு.ஆறுமுகம், மரு.கெவிலியா, மரு.சரண்யா உட்பட பலர் உடனிருந்தனர்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
- குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடலூர்:
தமிழக முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் நிலை கடலூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவியுள்ளது.
இதனையடுத்து சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூரில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகம் மூலம் பொது மக்களுக்கு காய்ச்சல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கு சிகிச்சை மற்றும் இந்த காய்ச்சல் சளி பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர்.
மேலும் நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியா ளர்கள் அனை வரும் தெருக்களிலும் வீதிகளிலும் கொசுவை ஒழிக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கவும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மக்களின் நலன் காக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்றும் பரவி வரும் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் காய்ச்சல் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு வரும் காய்ச்சல் உடனடியாக சரியாக வில்லை.
அதற்கு மாறாக காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டால் பலருக்கு வைரல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரை உட்கொண்டு வருவதை காண முடிகிறது. மேலும் தற்போது பரவக்கூடிய இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலின் வீரியம் குறையாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.
இது மட்டும் இன்றி ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது சில தினங்களாக தொடர் மழையும், காலை நேரங்க ளில் வெயில் அடித்து வருவதால் சீதோசனம் மாற்றம் காரணமாக இந்த காய்ச்சல் பரவுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இது மட்டும் இன்றி காய்ச்சல் ஏற்பட்ட வர்களுக்கு சளி, இரும்பல் போன்ற நோய்களும் ஏற்பட்டு அவதியடைந்து வருவதை யும் காணமுடிகிறது. இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக் கொண்டு சிகிச்சை க்காக காத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இதுபோன்ற காய்ச்சல் திடீரென்று அதிகரித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தனி கவனம் செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து குடிக்கும் தண்ணீரில் பிரச்சனையா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் பரமாத்மா (வயது31) இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி செந்தாமரை என்கிற மனைவியும், கனிஷ்கா (வயது 3), யோகஸ்ரீ (10 மாத குழந்தை) உள்ளனர்.
இந்நிலையில் யோகஸ்ரீக்கு கடந்த மாதம் 15-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யோகஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தந்தை பரமாத்மா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனையாகும் தரமற்ற தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. இத்தண்ணீரை சிலர் காய்ச்சி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர், 6 முதல் 10 நாட்கள் வரை சேமித்து பயன்படுத்துகின்றனர்.
இச்சூழலில், வக்கம்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சில நாட்களாக காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். வக்கம்பட்டியில், பெரும்பாலான வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
இக்காய்ச்சல் பாதிப்பால், முதியோர் கை, கால்களை முடக்கும் நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதாரத்துறையினர், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.