search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls"

    • பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
    • தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.

    இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.

    மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கு கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இளம்பெண் இருந்தார்.

    சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மகள் வீட்டில் இல்லாதது கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இளம்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் உடுமலையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அவரது காதலனுடன் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் அபிநயா. இவர் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பழங்காநத்தம் பசும்பொன் நகர் ஜூவா தெருவை சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவரது மகள் சங்கீதா. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தோழி கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பலனில்லை.

    இது தொடர்பாக சண்முகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பொன்னகரம் பிராட்வே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுவேதா(வயது20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுவேதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில் பெத்தானியத்தைபுரத்தை சேர்்ந்த சூர்யா என்பவர் மகளை அழைத்து சென்றதாக குறிப்பிட்டி ருந்தார். இதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர்

    சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர்.
    • திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். சஹானா பர்வின், கோ. சி. யாழினி ஆகியோர் 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர். விருது பெற்ற மாணவிகளுக்கு காமராசர் விருதுக்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். 12 ம் வகுப்பு மாணவி எஸ். சஹானா பர்வின் வங்கிக்கணக்கில் ரொக்கப்பரிசு ரூ. 20ஆயிரமும், 10 ம் வகுப்பு மாணவி கோ. சி. யாழினி வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.

    விருது பெற்ற மாணவிகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ப. விஜயா, உதவித்தலைமை ஆசிரியர்கள் ஏ. ஜெயராஜ், மஞ்சுளா, தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.

    • கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் திருமணம், பெண்கள் மாயம், பாலியல் தொல்லை குற்றங்கள் போன்றவை அதிகரித்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஏ.முக்குளம் கிராமத்தில் 100 நாள் பணியில் இருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேரில் சென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    • பல கி.மீ. தொலைவில் உள்ள முத்துப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    எடையூர் சங்கேந்தி அம்மலூர் வர்த்தக சங்க தலைவர் மாதவன் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எடையூர் சங்கேந்தி பகுதியை சுற்றி பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், செறுபனையூர், பாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை எடையூர், நாச்சிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிலும், பாண்டியில் உள்ள உயர்நிலை பள்ளியிலும் படிக்க வைத்து வருகின்றனர்.

    ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வாறு வேண்டுமேயானால், பல கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.

    அவ்வாறு அங்கு சென்று படித்து வரும் மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எடையூர் கிராமத்தை மையமாக வைத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
    • மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

    தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளை தேடி வருகிறார்கள்.
    • பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்படும் வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதர வற்ற குழந்தைகள் தங்கி இருந்து படித்து வருகின்ற னர். மேலும் குற்ற வழக்கு களில் கைதான மைனர் சிறுமிகள் கோர்ட்டு அனுமதி யுடன் இங்கு தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த காப்பகத்தில் கடந்த மாதம் காரைக்குடி போலீ சார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலையில் கழிவறை செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்ப கத்தின் பொறுப்பாளர் ஜெயா இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 2 சிறுமிகளும் எங்கு உள்ளனர்? என்று விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருது கின்றனர். அதனடிப்படை யிலும் சிறுமிகளை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    • பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
    • அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி (டேக்வாண்டோ) நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன்.

    வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    • சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 49), மில் தொழிலாளி. இவர் 11 வருடத்திற்கு முன்பு சரஸ்வதி (35) என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜா பணிக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் கோபாலன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் (16) 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி மாலை பாலமுருகன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் - ஆமத்தூர் ரோட்டில் வடமலாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். பாலமுருகன் வீட்டிற்கு வந்து மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இல்லை. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்களைக் கண்டுபிடித்துத் தருமாறு

    விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×