search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்கள் மாயம்
    X

    இளம்பெண்கள் மாயம்

    • இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் அபிநயா. இவர் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பழங்காநத்தம் பசும்பொன் நகர் ஜூவா தெருவை சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவரது மகள் சங்கீதா. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தோழி கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பலனில்லை.

    இது தொடர்பாக சண்முகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பொன்னகரம் பிராட்வே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுவேதா(வயது20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுவேதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில் பெத்தானியத்தைபுரத்தை சேர்்ந்த சூர்யா என்பவர் மகளை அழைத்து சென்றதாக குறிப்பிட்டி ருந்தார். இதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×