என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமிகள் உட்பட 4 பேர் மாயம்
- சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 49), மில் தொழிலாளி. இவர் 11 வருடத்திற்கு முன்பு சரஸ்வதி (35) என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜா பணிக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் கோபாலன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் (16) 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி மாலை பாலமுருகன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் - ஆமத்தூர் ரோட்டில் வடமலாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். பாலமுருகன் வீட்டிற்கு வந்து மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இல்லை. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்களைக் கண்டுபிடித்துத் தருமாறு
விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்