search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
    X

    மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது.

    அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

    • பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
    • அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி (டேக்வாண்டோ) நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன்.

    வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×