search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிகள்"

    • உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
    • அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

    கன்னியாகுமரி மாவட்டம் அக்ஸ்தீஸ்வரம் அருகே 13 வயதுடைய இரு சிறுமிகள் கடந்த 25ம் தேதி கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை "ஆ" கிராமம். பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02 2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா வயது 13) த/பெ முத்துக்குமார் மற்றும் செல்வி தர்ஷினி வயது 13] த/பெ இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

    உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    • மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார்.
    • கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் தாதாகப்பட்டி கார்ப்பரேசன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா வயது 54, இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார். இதனால் அங்கு காதர்பாஷா அடிக்கடி சென்று வந்தார். அப்போது கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியான பள்ளி மாணவி ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளான 2 சிறுமிகளுக்கும் காதர்பாஷா ப ாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    • சிவகங்கை காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளை தேடி வருகிறார்கள்.
    • பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்படும் வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதர வற்ற குழந்தைகள் தங்கி இருந்து படித்து வருகின்ற னர். மேலும் குற்ற வழக்கு களில் கைதான மைனர் சிறுமிகள் கோர்ட்டு அனுமதி யுடன் இங்கு தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த காப்பகத்தில் கடந்த மாதம் காரைக்குடி போலீ சார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலையில் கழிவறை செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்ப கத்தின் பொறுப்பாளர் ஜெயா இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 2 சிறுமிகளும் எங்கு உள்ளனர்? என்று விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருது கின்றனர். அதனடிப்படை யிலும் சிறுமிகளை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    • சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 49), மில் தொழிலாளி. இவர் 11 வருடத்திற்கு முன்பு சரஸ்வதி (35) என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜா பணிக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் கோபாலன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் (16) 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி மாலை பாலமுருகன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் - ஆமத்தூர் ரோட்டில் வடமலாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். பாலமுருகன் வீட்டிற்கு வந்து மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இல்லை. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்களைக் கண்டுபிடித்துத் தருமாறு

    விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.
    • வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள நத்தனேரியை சேர்ந்தவர் சின்னதுரை(21). தூத்துக்குடி கல்லூரியில் மருத்துவபடிப்பு படித்து வருகிறார். இவரது 16 வயது தங்கை தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் மாடியில் சென்று படிக்க போவதாக சிறுமி கூறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுமி அங்கில்லை.

    எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வேப்பம்குளத்தை சேர்ந்தவர் வள்ளி. இவரது 16 வயது மகள் காரியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகள் வேலை பார்த்த பேக்கரிக்கு வள்ளி போன் செய்து விசாரித்தபோது சிறுமி சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் வள்ளி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாக சென்றனர்.
    • சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி, காமராஜ் காலனி, கீழத்தெருவை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு மகள் பிரித்திகா (வயது14) இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மகள் குணசுந்தரி (16).

    இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    2 பேரும் நேற்று காலை அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாகவும், வீட்டில் இருந்த ஆடுகளை மேய விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி குடமுருட்டி ஆற்றுப்பகு திக்கு சென்றனர்.

    குடமுருட்டி ஆற்றுப்ப குதியில் சிறுமிகள் கொண்டு சென்ற இரண்டு அலுமினிய பாத்திரங்களும் மணலில் வைக்கப்பட்டிருந்தன.

    துணிகள் துவைத்து காய வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    2 பேரையும் காணவில்லை. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து தேடினார்கள்.

    அப்போது ஆற்றில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் 2 சிறுமிகளையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் 2 பேர் பிணத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரேதபரிசோதனைக்கு பின்னர் 2 சிறுமிகளின் உடல்களும் ஒன்பத்துவேலி காமராஜர் காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது.

    அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
    • இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவரின் 14 வயது மகள், குகை பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதேபோல், குகை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு 14 வயது சிறுமியும் மாயமானார். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை இருவரும் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈரோட்டுக்கு விரைந்த போலீசார், சிறுமிகளை மீட்டு வந்து, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.
    • மதுரையில் 34 மாதங்களில் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல் நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக பதி வான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    அதாவது கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்த மாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

    எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில்மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • காரியாபட்டி, வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் கல்யாணி (86). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது மகன் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விருதுநகர் அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் மாயமானது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் முதுநகரில் காணாமல் போன 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
    • சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் திடீரென்று மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு சேர்ந்த 3 சிறுமிகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் திடீரென்று காணவில்லை. அப்போது அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் 3 சிறுமைகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்கள், சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் உடன்படித்த மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவர்களை தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 சிறுமிகள் காணாமல் போன சமயத்தில் எந்தெந்த பஸ்கள், சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவிகள் காணாமல் சென்ற நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அதில் இருந்த நடத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது துப்பு கிடைத்தது. இதில் கடலூர் முதுநகரிலிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மூன்று சிறுமிகள் பஸ்ஸில் ஏறி வந்தனர். பின்னர் அதே பகுதியில் 3 சிறுமிகள் மீண்டும் இறங்கினர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே பஸ்ஸில் ஏறினர். குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி என்ற பகுதிக்கு சென்று இறங்கி உள்ளனர் என்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொத்தவாச்சேரி கிராமத்திற்கு சென்று அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த வீட்டில் மூன்று மாணவியர்கள் புதிதாக வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மூன்று சிறுமிகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கடலூர் முதுநகர் பகுதிக்கு அதே ஊரை சேர்ந்த சிறுவன் ஒருவர் அவ்வபோது அவரது பாட்டி வீட்டிற்கு வந்து செல்வார். மேலும் 3 சிறுமிகளுடன் இந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எங்கள் பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பஸ் பெண்களுக்கு இலவசம் என கூறியுள்ளார். மேலும் அவரது ஊர் கொத்தவாச்சேரி என தெரிவித்த காரணத்தினால் இந்த சிறுமிகள் பஸ்ஸில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையின் காரணமாக திடீரென்று சென்று உள்ளனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் எங்கு செல்ல வேண்டும் என கேட்டபோது கொத்தவாச்சேரி என்று கூறியதால் அங்கு நடத்துனர் இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது. மேலும் 3 சிறுமிகளின் ஒரு சிறுமி தனது தாயார் செல்ஃபோனுக்கு அங்கிருந்த நபர்களிடமிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் வந்துள்ளதால் அந்த பகுதியில் வசித்து வந்த சிறுவன் பெயரை கேட்டு வீட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கி வீட்டில் விட்டனர். இதனை தொடர்ந்து சிறுமிகள் காணாமல் சென்ற 8 மணி நேரத்தில் கண்டு பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிவிரைவு படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டு தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது

    • சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
    • குழந்தைவேலன் காவடியுடன் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

    இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குழந்தை வேலன் காவடி எடுத்து சிறுவர்-சிறுமியர்கள் வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைபயணமாக சென்று வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சிவகாசி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால் குடத்துடன், காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணம் சென்ற பக்தர்கள் முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், நாராயணசாமி கோவில், திருத்தங்கல் முருகன்கோவில் வரை சென்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தினர்.

    நிகழ்ச்சியினை வழிநடத்திய ஆறுமுக சுவாமிக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×