search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
    X

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    • கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் திருமணம், பெண்கள் மாயம், பாலியல் தொல்லை குற்றங்கள் போன்றவை அதிகரித்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஏ.முக்குளம் கிராமத்தில் 100 நாள் பணியில் இருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேரில் சென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×