search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl death"

    ஆலங்குளத்தில் இன்று காலை டிராக்டர் மோதி 3 வயது சிறுமி பலியானதையடுத்து போலீசார் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவரது மகள் வினிதா (வயது 3). இவள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இன்று காலை சிறுமி வினிதா வழக்கம்போல் அங்கன்வாடிக்கு தனியாக நடந்து சென்றாள். ஆனால் அங்கன்வாடி பூட்டப்பட்டிருந்தது.

    அப்போது அங்கு சிறுமியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்லப்பசாமி மகன் ராஜ்குமார் டிராக்டரில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் டிராக்டரை இயக்கி நகர்த்த முயன்றார். ராஜ்குமாரை பார்த்த சிறுமி வினிதா, மாமா என்று அழைத்தவாறு அவரை நோக்கி சென்றது. இதை கவனிக்காத ராஜ்குமார் டிராக்டரை பின்நோக்கி நகர்த்தினார்.

    இதில் டிராக்டர் சிறுமி மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுமி வினிதா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் சப்-இன்பெக்டர் உமா மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி பலியாகி கிடந்ததை பார்த்து அவரது தாய், பாட்டி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை பெற்ற 18 நாளில் பெண் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஆண்டிபட்டி நாச்சியார் புரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் மீனாவிற்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தையும், 18 நாளில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீனாவின் தந்தை ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் மீனா தற்கொலை செய்யவில்லை. அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

    திருமணமான நாளில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை அடிப்படையில் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மணிகண்டன், அவரது தாயார் பாக்கியலட்சுமி, சகோதரி ராஜாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மீனாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    செய்யாறு அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க கலெக்டர் உத்திரவிட்டார். #GajaCyclone #Gajastorm
    திருவண்ணாமலை:

    வெம்பாக்கம் தாலுகாவில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில்:-

    ‘‘செய்யாறு கோட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் சுவர் இடிந்து குடிசை வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமி உயரிழந்துள்ளார். மேலும் அதே குடும்பத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது’’ என்றார். #GajaCyclone #Gajastorm
    கஜா புயல் காரணமாக பெய்த மழையால் செய்யாறில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். #GajaCyclone #Gajastorm
    செய்யாறு:

    கஜா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை செய்தது.

    வந்தவாசி, செய்யாறு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. வந்தவாசியில் அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பெய்தது. செய்யாறு, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், சாத்தனூர்அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. புயல் மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் பாதிக்கப்பட்டது.

    செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி (வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள்கள் பிரியதர்ஷினி (15) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிரியாமணி (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ் பிரியா (3).

    இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.

    இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த மற்ற 4 பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயமடைந்த துளசி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அவரது மனைவி லட்சுமி, மகள்கள் பிரியதர்ஷினி, தமிழ்பிரியா ஆகியோர் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    மோரணம் போலீசார் பலியான சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone #Gajastorm



    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசே‌ஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி அருகே குட்டையில் நீச்சல் பழகிய மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பழனி:

    பழனி அருகே உள்ள புதுஆயக்குடியை சேர்ந்தவர் அழகர். விவசாயி. அவரது மகள்கள் மீனா (வயது 10), ஸ்ரீத்ரி (9). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6, 5-ம் வகுப்பு படித்தனர்.

    அழகருக்கு கணக்கன் பட்டியை அடுத்த ராம பட்டிணம்புதூரில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு விவசாய பயன்பாட்டுக்காக அழகர் பண்ணை குட்டை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்.

    சம்பவதன்று அக்காளும், தங்கையும் அந்த தோட்டத்துக்கு சென்றனர். பின்னர் பண்ணைக்குட்டையில் இறங்கி நீச்சல் பழகி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீத்ரி தண்ணீரில் மூழ்க தொடங்கினாள். இதைப்பார்த்த மீனா அவளை காப்பாற்ற முயன்றாள். ஆனால் அதற்குள் ஸ்ரீத்ரி தண்ணீரில் மூழ்கி பலியானாள். காப்பாற்ற சென்ற மீனாவும் தண்ணீரில் மூழ்கி மயங்கினாள்.

    இதற்கிடையே அந்த வழியாக வந்த தொழிலாளர்கள் குட்டைக்குள் 2 சிறுமிகள் மூழ்கி கிடப்பதை பார்த்தனர். உடனே 2 பேரையும் மேலே கொண்டு வந்து பார்த்த போது, ஸ்ரீத்ரி ஏற்கனவே இறந்திருப்பதும், மீனா மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    உடனே அவளை ஒட்டன் சத்திரம் தனியார் மருத்துவ மனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 39). இவரது மனைவி சுமித்ரா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கவுதமன் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது இதை சுமித்ரா கண்டித்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 18-ந் தேதி கவு தமன் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்ததார். அப்போது சுமித்ரா தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் சுமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம் அருகே பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அன்னப்பூரணி (வயது13). உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தாள். தாய் தந்தை இல்லாத நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று அன்னப்பூரணி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினாள்.
     
    இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அன்னப்பூரணி எப்படி இறந்தாள் என்று தெரியவில்லை. 

    உறவினர் ஒருவர் அவளை சத்தம் போட்டதாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் அவர்  தூக்குப்போட்டுதற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவரும், இவரது மனைவி சத்யா (25) மற்றும் இவருடைய மாமன் மகன் நாகராஜ்(25) ஆகிய 3 பேரும் இன்று காலை சொந்த வேலை காரணமாக ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இந்த மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று லாரியை முந்திச்செல்ல முயன்றது. இதில் கார் நிலைதடுமாறி செல்வம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கி, சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அவரது கணவர் செல்வம் மற்றும் உறவினர் நாகராஜ் ஆகிய இருவரும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அடிப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கும், நாகராஜை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் காரை பறிமுதல் செய்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே பைக் மீது காரை மோதி இளம்பெண்னை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பீமன். இவரது மகன் அய்யப்பன் என்கிற மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி (25). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

    இன்று காலை மணிகண்டன் மனைவியுடன் பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோடிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் பலியான சுமதியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, காரை ஓட்டிய மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் பைக் மீது காரை மோதி வசந்தகுமார் சுமதியை கொன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

    லாரி டிரைவரான வசந்தகுமாருக்கும் பலியான சுமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சுமதியின் குடும்பத்திற்கும் வசந்த குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வசந்தகுமாருடன் இருந்த கள்ளக்காதல் உறவை சுமதி துண்டித்தார். சுமதியை சந்தித்து தொந்தரவு செய்துவந்தார். ஆனால் கள்ளக்காதலனுடன் பேசுவதை சுமதி முற்றிலும் தவிர்த்தார். இதனால் வசந்தகுமார் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில், வசந்தகுமாரின் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக திருமண வேளைகளை கவனிக்க காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடியாத்தத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது மோடிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் கணவன் மணிகண்டனுடன் சுமதி அமர்ந்திருந்தார். இதனை கவனித்த கள்ளக்காதலன் வசந்தகுமார் காரை ஏற்றி சுமதியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமாரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×