என் மலர்
நீங்கள் தேடியது "House wall collapsed"
- திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.
- இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தன்நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி லில்லிசவுந்திரம்(56). கணவர் இறந்துவிட்டநிலையில் மகன் சுரேஷ்(38). அவரது மனைவி லூர்துமேரி, பேரன், பேத்தி மற்றொரு மகன் ஆல்வின் ஆல்பர்ட்(28) ஆகியோருடன் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்.
இதில் ஆல்வின்ஆல்பர்ட் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்றுஇரவு வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.
இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அழகுமலை, பாலகிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ அரவிந்த் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், லில்லிசவுந்திரம் வீட்டிற்கு சென்று நிவாரணபொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
வெம்பாக்கம் தாலுகாவில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில்:-
‘‘செய்யாறு கோட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் சுவர் இடிந்து குடிசை வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமி உயரிழந்துள்ளார். மேலும் அதே குடும்பத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது’’ என்றார். #GajaCyclone #Gajastorm
கஜா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை செய்தது.
வந்தவாசி, செய்யாறு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. வந்தவாசியில் அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பெய்தது. செய்யாறு, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், சாத்தனூர்அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. புயல் மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் பாதிக்கப்பட்டது.
செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி (வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள்கள் பிரியதர்ஷினி (15) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிரியாமணி (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ் பிரியா (3).
இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த மற்ற 4 பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயமடைந்த துளசி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அவரது மனைவி லட்சுமி, மகள்கள் பிரியதர்ஷினி, தமிழ்பிரியா ஆகியோர் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மோரணம் போலீசார் பலியான சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone #Gajastorm






