என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் கனமழைக்கு இடிந்த வீட்டுச்சுவர்
- திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.
- இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தன்நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி லில்லிசவுந்திரம்(56). கணவர் இறந்துவிட்டநிலையில் மகன் சுரேஷ்(38). அவரது மனைவி லூர்துமேரி, பேரன், பேத்தி மற்றொரு மகன் ஆல்வின் ஆல்பர்ட்(28) ஆகியோருடன் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்.
இதில் ஆல்வின்ஆல்பர்ட் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்றுஇரவு வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.
இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அழகுமலை, பாலகிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ அரவிந்த் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், லில்லிசவுந்திரம் வீட்டிற்கு சென்று நிவாரணபொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்