search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கேற்றிய போது தீயில் கருகி சிறுமி பலி
    X

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கேற்றிய போது தீயில் கருகி சிறுமி பலி

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×