search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து சிறுமி உடல் நசுங்கி பலி
    X

    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து சிறுமி உடல் நசுங்கி பலி

    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசே‌ஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×