என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து சிறுமி உடல் நசுங்கி பலி
Byமாலை மலர்5 Nov 2018 11:05 AM GMT (Updated: 5 Nov 2018 11:05 AM GMT)
திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்:
திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.
நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X