search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car collapsed"

    தஞ்சை அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்கள் சென்னையை சேர்ந்த பரத் (வயது 21), கேரளா வயநாட்டை சேர்ந்த அரவிந்த் (21), சென்னையை சேர்ந்த சூர்யா (21).

    மேலும் இதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் திருவாரூரை சேர்ந்த ரம்யா (21), சென்னையை சேர்ந்த நித்யா (21), இதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஜந்தாம் ஆண்டு படித்து வருபவர் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சவுமியா (21).

    இதில் மாணவர்கள் பரத், அரவிந்த், சூர்யா ஆகியோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். மாணவிகள் ரம்யா, நித்யா, சவுமியா ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரளாவை சேர்ந்த மாணவர் அரவிந்தை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக பரத்,ரம்யா,சூர்யா, நித்யா,சௌமியா ஆகியோர் பரத்தின் காரில் திருச்சி சென்றனர். அங்கே அரவிந்தை திருச்சி ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு காரில் தஞ்சைக்கு அதிகாலை 5.30 மணி அளவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    இவர்கள் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி-திருச்சி சாலையில் மூன்று கண் பாலம் அருகே வந்த போது இவர்களின் கார் டயர் வெடித்து சாலையில் நான்கு முறை உருண்டு கவிழ்ந்துள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த மாணவி ரம்யா வெளியே தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகே வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனத்தில் ரம்யாவின் ஆடை மாட்டி கொண்டு சிறிது தூரம் அந்த வாகனம் ரம்யாவை இழுத்து சென்றுள்ளது. இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    மேலும் காருக்குள் அடியில் சிக்கி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இதில் நித்யா, சவுமியா, சூர்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே சுற்றுலா வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வடமதுரை:

    சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் பிரிவில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் எதிர்திசையில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்தில் கரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மாதம்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது27), காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் (27), தேனியை சேர்ந்த முத்துகாமு (21), கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மற்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    நாகர்கோவில் அருகே ரோட்டோரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டோனாவூரைச் சேர்ந்தவர் சாலமன் பாக்கியராஜ். இவர் வெளிநாட்டில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

    வெளிநாட்டில் இருந்து நேற்று ஊருக்கு திரும்புவதாக தனது மனைவி ரோஸ்வின் (வயது 37) என்பவரிடம் கூறினார். இதையடுத்து ரோஸ்வின், தனது குழந்தைகள் கெபின் (7), கிங்ஸ்லின் (5) ஆகியோருடன் திருவனந்த புரத்தில் இருந்து கணவரை அழைத்து வருவதற்காக காரில் புறப்பட்டனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர் ஓட்டினார். நள்ளிரவு இவர்கள் திருவனந்தபுரம் சென்றனர். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய சாலமன் பாக்கியராஜை அழைத்துக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பினார்கள்.

    நாகர்கோவில் அருகே வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக டிரைவர் துரைமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கார் தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் கார் புகுந்தது. அங்கிருந்த மரத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    காரில் இருந்த சாலமன் பாக்கியராஜ், ரோஸ்வின், அவரது குழந்தைகள் கெவின், கிங்ஸ்லின், டிரைவர் துரைமுத்து ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நெடுஞ்சாலை ரோந்து படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருச்சி:

    சென்னையை சேர்ந்த ராஜேஷ்குமார், ராஜா, விஜயக்குமார், வின்சன் தேவன், ரோஜ் ஆகிய 5 பேரும் நெல்லையில் நடைபெற்ற நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்று விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். 

    கார் இன்று அதிகாலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற இடத்தில் கார் சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேர் படுகாய மடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூரில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சினிமா டான்ஸ் மாஸ்டர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஓசூர்:

    ஈரோடை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் சரவணப்பிரியன்(32). இவர் சென்னையில் சினிமா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அவர் தனது காரில் சென்னையை சேர்ந்த தீபா(29) என்ற பெண் நண்பருடன் பெங்களூரு நோக்கி சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து. இந்த விபத்தில், சரவணப்பிரியன் மற்றும் தீபா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலையில் நடந்த இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். 

    கார் நடுரோட்டில் கவிழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
    திருச்சி அருகே இன்று அதிகாலை பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை-சகோதரிகள் காயம் அடைந்தனர்.
    மணப்பாறை:

    மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை கீழகுயில்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 58). இவரது மகள்கள்   கோகிலா (26), தேன்மொழி (20). இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். 

    பின்னர் அவர்களை பெரியண்ணன் மற்றும் அவரது மகன் என்ஜினீயரான அரவிந்த்ராஜன் (22) ஆகியோர் காரில் அழைத்துக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டனர். காரை மதுரையை சேர்ந்த பாண்டியன் (30) ஓட்டினார். இன்று அதிகாலை  திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில்  துவரங்குறிச்சி அதிகாரம் பகுதியில் செல்லும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி, மறுபுறமுள்ள சாலையில் பாய்ந்து, அங்குள்ள 15அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த பெரியண்ணன், அவரது மகள்கள் கோகிலா, தேன்மொழி, அரவிந்த் ராஜன், டிரைவர் பாண்டியன், கோகிலாவின் குழந்தை ஜேசியா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் மீட்டு  சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜன் இறந்தார். 

    டிரைவர் தூக்ககலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளித்திருப்பூர் அருகே சுற்றுலா சென்றவர்களின் கார் டயர் திடீரென வெடித்ததில் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    பெங்களூருவை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவரும் இவரது நண்பர்கள் 4 பேரும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல விரும்பினர்.

    இதற்காக பெங்களூருவில் இருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர். வினோத் காரை ஒட்டினர்.

    நேற்று மாலை அவர்கள் வந்த கார் வெள்ளித்திருப் பூரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கெம்மியம்பட்டி அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் ஓடியது. சிறிது நேரத்தில் கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணித்த வினோத் உள்பட 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. பனியன் நூற்பாலை வைத்துள்ள இவருக்கு ஜெனிதா என்ற மனைவியும், அபினேஷ் (வயது 11) என்ற மகனும், ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம், கயத்தாறில் உள்ள உறவினர் வீட்டு விசே‌ஷத்தில் பங்கேற்பதற்காக முருகையா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோட சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஹரிணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த முருகையா, ஜெனிதா, அபினேஷ் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

    ஆம்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனிஸ் அலிகான். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் சவுதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்தார். நேற்றிரவு, விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

    அவர்களை ஓசூருக்கு அழைத்து வருவதற்காக, முனிஸ் அலிகானின் மகன் முகமதுஅபாஸ் (23) மற்றும் இவரது உறவினர் லியகத் அலித்கான் மகன் ஜுபேர் அலிகான் (40) ஆகிய இருவரும் 2 கார்களை எடுத்து சென்றனர். ஒரு காரில் ஹஜ் பயணம் சென்றவர்கள் வந்தனர்.

    மற்றொரு காரில் முகமது அபாஸ் மற்றும் ஜுபேர் அலிகான் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். அப்போது, ஹஜ் பயணம் சென்றுவிட்டு திரும்பிய தருமபுரி அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அப்துல்ரகுமான் (38) என்பவரும், லிப்ட் கேட்டு அவர்களுடன் காரில் ஏறி பயணித்தார்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரை கடந்து கார்கள் சென்றது. ஆம்பூர் அடுத்த கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது முகமது அபாஸ் உள்பட 3 பேர் பயணித்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது.

    அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முகமது அபாஸ், ஜுபேர் அலிகான் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    உடன் வந்த பேராசிரியர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி அருகே இன்று காலை நடுரோட்டில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தருமபுரி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 40). இவர் வேலூர் காமராஜர் நகரில் வசித்து வருகிறார்.

    குடும்பத்துடன் இவர் கருங்கடல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு சென்று விட்டு காரில் வேலூர் திரும்பி கொண்டிருந்தார். இன்று காலை இந்த கார் தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த வேலூர் மூங்கல்பட்டியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ். ஸ்டீபன்ராஜ், அவரது மனைவி பிரமிலா (34) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஸ்டீபன் ராஜின் குழந்தைகள் ஆரோக்கிய பபிதா, காசினி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    புதுக்கோட்டையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். பெண் பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அசோக்நகரை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 74). இவரது உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளனர். இந் நிலையில் மீனாட்சி அவர்களை பார்க்க செஞ்சிக்கு சென்றார். பின்னர் உறவினர்கள் ஜெயந்தி (60), ஜெயலட்சுமி,  நிசாந்தன் (1) சாரதா உள்பட 5 பேருடன் ஒரு வாடகை காரில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றனர். காரை செல்வம் என்பவர் ஓட்டினார்.

    கார் இன்று அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த ஜெயந்தி, ஜெயலட்சுமி, நிசாந்தன், சாரதா, கார் டிரைவர் செல்வம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×