என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை படுகாயம்"

    நாகர்கோவில் அருகே ரோட்டோரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டோனாவூரைச் சேர்ந்தவர் சாலமன் பாக்கியராஜ். இவர் வெளிநாட்டில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

    வெளிநாட்டில் இருந்து நேற்று ஊருக்கு திரும்புவதாக தனது மனைவி ரோஸ்வின் (வயது 37) என்பவரிடம் கூறினார். இதையடுத்து ரோஸ்வின், தனது குழந்தைகள் கெபின் (7), கிங்ஸ்லின் (5) ஆகியோருடன் திருவனந்த புரத்தில் இருந்து கணவரை அழைத்து வருவதற்காக காரில் புறப்பட்டனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர் ஓட்டினார். நள்ளிரவு இவர்கள் திருவனந்தபுரம் சென்றனர். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய சாலமன் பாக்கியராஜை அழைத்துக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பினார்கள்.

    நாகர்கோவில் அருகே வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக டிரைவர் துரைமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கார் தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த தென்னந்தோப்புக்குள் கார் புகுந்தது. அங்கிருந்த மரத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    காரில் இருந்த சாலமன் பாக்கியராஜ், ரோஸ்வின், அவரது குழந்தைகள் கெவின், கிங்ஸ்லின், டிரைவர் துரைமுத்து ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நெடுஞ்சாலை ரோந்து படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மகள் லட்சுமிக்கு திருமணமாகி நேகாஸ்ரீ (2½) என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தது.

    இன்று காலை குழந்தையை பள்ளியில் விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். எண்ணூர் விரைவு சாலை சக்திநகர் பகுதியில் சென்றபோது எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    திடீரென்று லாரி தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தை நேகா ஸ்ரீயை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். டிரைவரை பிடித்து வைத்துக் கொண்டு அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர். அவரது பெயர் காளிதாஸ் (40), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    ×