search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student died"

    • வீட்டில் தனியாக இருந்த மாணவர் பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
    • மயங்கிய வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது18). தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுதர்சன், பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    அங்கு மயங்கி கிடந்த இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை அடுத்து பிரேத பரி சோதனை க்காக சுதர்சன் உடல் மருத்துவ மனையில் வைக்க ப்பட்டு ள்ளது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழகியபாண்டியபுரம்-உக்கிரன்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரான டவுனை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சாந்தகுமார்(வயது 18).

    இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அழகியபாண்டியபுரம்-உக்கிரன்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாந்தகுமார் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சாந்தகுமார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி டிரைவரான டவுன் வயல்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம்(55) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்கள் சென்னையை சேர்ந்த பரத் (வயது 21), கேரளா வயநாட்டை சேர்ந்த அரவிந்த் (21), சென்னையை சேர்ந்த சூர்யா (21).

    மேலும் இதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் திருவாரூரை சேர்ந்த ரம்யா (21), சென்னையை சேர்ந்த நித்யா (21), இதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஜந்தாம் ஆண்டு படித்து வருபவர் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சவுமியா (21).

    இதில் மாணவர்கள் பரத், அரவிந்த், சூர்யா ஆகியோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். மாணவிகள் ரம்யா, நித்யா, சவுமியா ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரளாவை சேர்ந்த மாணவர் அரவிந்தை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக பரத்,ரம்யா,சூர்யா, நித்யா,சௌமியா ஆகியோர் பரத்தின் காரில் திருச்சி சென்றனர். அங்கே அரவிந்தை திருச்சி ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு காரில் தஞ்சைக்கு அதிகாலை 5.30 மணி அளவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    இவர்கள் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி-திருச்சி சாலையில் மூன்று கண் பாலம் அருகே வந்த போது இவர்களின் கார் டயர் வெடித்து சாலையில் நான்கு முறை உருண்டு கவிழ்ந்துள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த மாணவி ரம்யா வெளியே தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகே வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனத்தில் ரம்யாவின் ஆடை மாட்டி கொண்டு சிறிது தூரம் அந்த வாகனம் ரம்யாவை இழுத்து சென்றுள்ளது. இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    மேலும் காருக்குள் அடியில் சிக்கி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இதில் நித்யா, சவுமியா, சூர்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வந்தவாசி அருகே பனை மரத்தில் பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் விக்னேஷ் (வயது 20). செங்கல்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் நரேஷ் (20) இருவரும் நேற்று இரவு தேசூரில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள விக்னேஷ் நரேஷ் இருவரும் பைக்கில் சென்றனர்.

    விழா முடிந்ததும் நள்ளிரவு வீடு திரும்பினர். தெள்ளார் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட விக்னேஷ் பைக்கை இடதுபுறமாக திருப்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பைக் சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நரேஷ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பெல்லியப்பா நகர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ரஞ்சித் நேற்று வீட்டிலிருந்து பைக்கில் வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ரஞ்சித் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் அருண் (வயது 19). இவர் திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு அருண், தனது நண்பர்கள் ராம் குமார் (22), காளிமுத்து (22) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் சென்றார்.

    அப்போது நெடுங்குளத்தில் இருந்து உலகாணி நோக்கி மணல் லாரி வந்தது. அந்த லாரி நெடுங்குளம் விலக்கில், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் அருண் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அருண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    ராம்குமார், காளி முத்து ஆகியோர் காயத்துடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் (59) விவசாயி. இவர், டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோபால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீப்பற்றியதில் கல்லூரி மாணவி உடல் கருகி பலியானார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகள் வித்யலட்சுமி (18). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிமுத்து தனது மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். வித்யலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் உணவு சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு குடிசை வீட்டில் தீப்பற்றியது.

    அந்த தீ வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அப்போது வித்யலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வர முயன்றார். அதற்குள் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    சிதறிய தீ அருகில் உள்ள பச்சைமுத்து, இளங்கோவன், ஈஸ்வரன், மணிகண்டன் ஆகியோரின் வீட்டிற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    வீட்டில் பிடித்த தீ கல்லூரி மாணவி வித்யலட்சுமி மீதும் பற்றியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம் பகத்தினர் தீயை அணைத்து வித்யலட்சுமியை மீட்டனர்.

    அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் வித்யலட் சுமி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.

    தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த நகை-பணம் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சத்யன் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

    இந்த தீ விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகள் மைதிலி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மைதிலி, கோத்தகிரியை சேர்ந்த ஒருவருடன் பீளமேட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மைதிலி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

    இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×