search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி

    வாலாஜா அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பெல்லியப்பா நகர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ரஞ்சித் நேற்று வீட்டிலிருந்து பைக்கில் வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ரஞ்சித் பலத்தகாயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×