search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளித்திருப்பூர் அருகே சுற்றுலா சென்றவர்களின் கார் கவிழ்ந்தது- 5 பேர் காயம்
    X

    வெள்ளித்திருப்பூர் அருகே சுற்றுலா சென்றவர்களின் கார் கவிழ்ந்தது- 5 பேர் காயம்

    வெள்ளித்திருப்பூர் அருகே சுற்றுலா சென்றவர்களின் கார் டயர் திடீரென வெடித்ததில் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    பெங்களூருவை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவரும் இவரது நண்பர்கள் 4 பேரும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல விரும்பினர்.

    இதற்காக பெங்களூருவில் இருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர். வினோத் காரை ஒட்டினர்.

    நேற்று மாலை அவர்கள் வந்த கார் வெள்ளித்திருப் பூரை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கெம்மியம்பட்டி அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் ஓடியது. சிறிது நேரத்தில் கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணித்த வினோத் உள்பட 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×