search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் தகராறு: தீக்குளித்த பெண் மரணம்
    X

    கணவருடன் தகராறு: தீக்குளித்த பெண் மரணம்

    ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 39). இவரது மனைவி சுமித்ரா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கவுதமன் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது இதை சுமித்ரா கண்டித்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 18-ந் தேதி கவு தமன் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்ததார். அப்போது சுமித்ரா தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் சுமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×