search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gautam Gambhir"

    • நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது.
    • சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது.

    இந்நிலையில் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங் வேகமும் இல்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை.

    எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

    என்று கம்பீர் கூறினார்.

    • வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    • ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5-வது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இது டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

    இந்நிலையில் ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்படுகிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

    ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம்.

    என்று கம்பீர் கூறியுள்ளார்.

    • அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது.
    • நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார்.

    இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.

    அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களையும் ஒட்டுமொத்தமாக 73 சதங்களையும் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனையை விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது சாதனையை பொறுத்ததல்ல. நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார். ஏனெனில் இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன.

    அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்து பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

    இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்து விளங்குவதால் இந்த சாதனையை நிச்சயம் முறியடிப்பார்.

    என்று அவர் கூறினார்.

    • ஐ.பி.எல்.லை விட ஒரு நாள் போட்டிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்- இந்திய வீரர்களுக்கு காம்பீர் அறிவுரை
    • ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (ஒரு நாள் போட்டி) இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணி இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.லை விட உலக கோப்பை தான் மிகவும் முக்கியமானது. இதனால் உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் சுழற்பந்தில் அபாரமாக ஆடுவார்கள். இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    ஒரு நாள் போட்டியில் நிலைத்து நின்று ஆடுவது முக்கியமானது. பயமின்றி விளையாடும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதோடு ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவராக இருக்க வேண்டும்.

    உலக கோப்பையை வெல்ல புதிய அணுகு முறையை கையாள வேண்டும். தேவைப்படும் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்தும் வகையில் 20 ஓவரில் ஓய்வு கொடுக்க வேண்டும்.

    கடந்த இரண்டு உலக கோப்பையிலும் அணியாக விளையாடவில்லை. இது மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்திய வீரர்கள் தேவைப்பட்டால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    உலக கோப்பையை மனதில் வைத்து 50 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை மிக முக்கியமான தாகும்.

    இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

    டோனி தலைமையில் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் காம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் அவர் 97 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்?
    • குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பயிற்சியாளர் என்ன பண்றிங்க: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்து சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதனால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

    அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிடம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

    பயிற்சியாளர்கள் இந்திய அணியில் எதற்கு உள்ளார்கள்? தேர்வுக்குழுவினர் எதற்கு உள்ளார்கள்? அவர்கள் அணியை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை போட்டிக்கு தயார்படுத்துவதற்கும் உள்ளனர். தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் இவர்களைப் போன்ற இளம் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    குறிப்பாக பிரித்வி ஷா போன்றவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். அது அணி நிர்வாகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். அணியினரை தயார்படுத்தி பயிற்சிக்கு உதவுவது மட்டும் அவர்களது வேலையல்ல. அந்த வகையில் ராகுல் டிராவிட் அல்லது தேசிய தேர்வுக்குழுவினர் அவரிடம் (பிரிதிவி) பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

    சொல்லப்போனால் அவர் இந்திய அணியை சுற்றியிருக்க வேண்டும். எப்போதும் சரியான பாதையில் இல்லாதவர்களை நீங்கள் அணியை சுற்றியிருக்க வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னர் நீங்கள் அவரைப் போன்ற தரமான வீரரை தேடி அனைத்து இடங்களிலும் அலைய நேரிடும்.

    நாட்டுக்காக விளையாட நீங்கள் போதுமான அர்ப்பணிப்பு ஆர்வத்துடன் அனைத்து அளவுருக்களையும் சரியாக செய்ய வேண்டும். அது உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக இருந்தாலும் சரி. அதை பிரிதிவி ஷா செய்வதற்கு பயிற்சியாளர்கள் தான் தூண்ட வேண்டும். மேலும் அவரைப் போன்ற ஒரு இளம் வீரருக்கு குறைந்தபட்சம் ஓரிரு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அதிலும் அவர் எதுவுமே செய்யவில்லை என்றால் பின்னர் அவர் நாட்டிற்காக ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று முடிவெடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார்.
    • கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மட்டும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

    இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் டி20 அணி தனியாகவும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஒரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது தான். தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

    நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.

    நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான். அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்கவையுங்கள்.

    இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,

    டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


    இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
    • என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான்.

    கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.

    இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், டி20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.

    என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
    • இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.

    டெல்லி:

    அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

    ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

    ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

    பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக் கோப்பையில் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த்தில் அடித்த அரைசதம் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அவருக்கு இணையாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி 3 அரைசதம் அடித்துள்ள நிலையில், சூர்யகுமார் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். குறிப்பாக பெர்த் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்ய குமார் விளையாடிய விதம் அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

    மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை துரத்தும் வல்லவை அவரிடம் உள்ளது. இதனால் டி வில்லியர்ஸ்க்கு பின் 360 டிகிரி என ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு 360 டிகிரி என பெயர் வைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறியதாவது:-

    சூர்யகுமாரை 360 டிகிரி போன்ற பெயர்களால் அழைக்க வேண்டாம். அதற்காக அவர் இன்னும் அதிக அளவில் உழைக்க வேண்டும். அவருக்கு ஏராளமான திறமைகள் உள்ளது. அது 360 டிகிரி, 180 டிகிரி அல்ல ஒரு டிகிரி என்பது விஷயம் அல்ல.

    அவரிடம் விளையாட்டு இருக்கிறது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். பாரம்பரிய பயிற்சியாளர் அவரை பார்க்கும்போது, அவர் திறமையான பேட்ஸ்மேனுக்கான லைனை தாண்டவில்லை என்றாலும், அவர் பெற்றுள்ள திறமையால் வெற்றிகரமாக திகழ்வார் என்று நிலையை எடுப்பார். முதல்தர கிரிக்கெட் மற்றும் எல்லா வகையிலான கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்தள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து, சிறப்பாக செயல்படுவார் என் நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும், ''மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் போன்று கவர் டிரைவ் அடிக்காமல் இருக்கலாம். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களை விட நினைத்து பார்க்க முடியாத வகையில் 180 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்'' என்றார்.

    • பாபர் மிடில் ஆர்டரில் இறக்க வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வற்புறுத்தல்.
    • நீங்கள் கேப்டனாக இருந்தால், உங்கள் அணியை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.

    உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது

    அதன் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.

    ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.

    கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் பகர் ஜமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய பகர் ஜமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.

    பாகிஸ்தான் 13.5 ஓவரில் 92 ரன் இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் பாபர் ஐந்து பந்தில் நான்கு ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வரும் வியாழன் அன்று நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    இந்த போட்டியில் பாபர் ஆசம் 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த போட்டிகளில் பாபர் ஆசம் மிடில்-ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்றவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் பகர் ஜமானை தொடக்க வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அது சுயநலம் என்று அழைக்கப்படுகிறது; ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர்,ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
    • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

    ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

    பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×