என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganguly"
- நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
- நான் விளையாடியதை விட அதிக போட்டிகளில் அவர் விளையாடுவார் .
ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் காங்குலி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். அவர் (கோலி) என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம், நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் .
நான் எனது தலைமுறையில் விளையாடினேன். அநேகமாக. நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போது, நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
- உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் உலக ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா:
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.
மேலும் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர்.
கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்திரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.
உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய மகாராஜா அணி விவரம்:-
கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி
உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:-
இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்
- விராட் கோலி 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
- டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 33 வயதான அவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு சதம் அடித்து இருந்தார்.
தற்போது விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை கேள்வி எழுப்பி இருந்தனர்.
அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகமே.
இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார். அவர் தனது வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-
விராட் கோலி தற்போது சவாலான நிலையில் உள்ளார். இது அவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அவர் தனது வழியை கண்டறிந்து வெற்றி பெற வேண்டும். 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே மீண்டும் நல்ல நிலைககு வர இயலும்.
விளையாட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஒவ்வொரு வருக்கும் நடந்துள்ளது. டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அது போலதான் தற்போது விராட் கோலிக்கு நடந்துள்ளது.
எதிர்கால வீரர்களுக்கும் இது மாதிரியான நிலை ஏற்படும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதனால் விராட் கோலி தனது குறைபாட்டை அறிந்து தனக்குரிய விளையாட்டை ஆட வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஒரு ரன்னும், 3-வது போட்டியில் 11 ரன்னும் எடுத்தார். முன்னதாக நடந்த 5-வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 31 ரன்களே எடுத்தார்.
விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும். இல்லையென்றால் அவர் இடம் பெறுவது கடினமாகிவிடும். உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது.
கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அவருக்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
- இன்று கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.
ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.
ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.
ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.
உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.
இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.
20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.
வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.
இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.
உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். #IPL2019 #Ganguly #ShikharDhawan
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 40 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் படத்தை மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் நீக்கியது.
இதேபோல மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்களும் இம்ரான்கான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படத்தை நீக்கியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிளப் ஹவுசில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா ஆகியோரது படங்கள் உள்ளன. இந்த படங்களை நீக்ககோரி கொல்கத்தா பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநில பா.ஜனதா நிர்வாகி கூறும் போது “இம்ரான்கானின் படத்தை நீக்கும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் நீக்கியது போலதான் படங்களை நீக்க வேண்டும் என்று கோருகிறோம்“ என்றார்.
இது தொடர்பாக கங்குலிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கங்குலி மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் ஆதரவாளர் ஆவார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும் துண்டிக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Ganguly #ImranKhan
2-வது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றதால் அஸ்வின், ஜடேஜா களம் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அஸ்வின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. அவரது காயம் இன்னும் குணமடையாததால் இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ச்சியாக காயம் அடைந்திருப்பது கங்குலிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் மொயீன் அலி 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற நிலையில், காயத்துடன் களம் இறங்கிய அஸ்வின், 37.1 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். காயத்தால் விளையாடியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக அஸ்வின் காயம் அடைவது குறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போது எனக்கு அஸ்வின் காயம் குறித்து பெரும் கவலையாக உள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரின்போது தொடர்ச்சியாக காயம் அடைந்துள்ளதால், அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது.
எதிரணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அஸ்வின் தேவைப்படுகிறார். ஆனால் காயத்தால் அவருடைய தனிச்சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஸ்வினால் செயல்பட முடியவில்லை’’ என்றார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
ராகுல் டிராவிட் 446 நிமிடம் களத்தில் நின்று 353 பற்துகளை சந்தித்து 180 ரன் (20 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன் எடுத்து அணியை தோல்வியில் இருந்து தவிர்த்து வெற்றி பெற வைத்தனர்.
281 ரன் குவித்த இந்த டெஸ்ட் குறித்து லட்சுமண் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வெளியிட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, ஜாகீர்கான் பங்கேற்றனர்.
எனது கேப்டன் பதவியும் பறிபோய் இருக்கும். லட்சுமண் 281 ரன் குவித்தது எனது கேப்டன் பதவியை காப்பாற்றினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
2001-ம் ஆண்டு நடந்த இந்த தொடரில் இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டிலும், சென்னையில் நடந்த 3-வது டெஸ்டிலும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. #Ganguly #VVSLaxman
இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் 2018 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஜோ ரூட் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.
தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டின் ஆட்டத்தை கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.
அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோ ரூட் மற்றும் ஜிண்டால் ஆகியோருக்கு ‘டேக்’ செய்திருந்தார். ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ்-தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், கங்குலி அவரின் ஆலோசகராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜோ ரூட் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஏலத்தில் ஜோ ரூட்டின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
What a performance from joe root and england on that surface ..one of the best test hundreds one will see on a pitch which is turning square .. @root66@ParthJindal11@ECB_cricket
— Sourav Ganguly (@SGanguly99) November 16, 2018
நேற்றைய விசாகப்பட்டினம் போட்டியில் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் எடுத்திருந்தபோது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அதிகவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சாதனைப் படைத்துள்ள விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆட்டத்தை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை. விசாகப்பட்டினம் ஆடுகளம் வித்தியாசமானதாக இருந்தது. சூழ்நிலையிலும் மாறுபட்டிருந்தது. ஆனால், விராட் கோலி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்விட்டார். விராட் கோலியின் சதம் மிகவும் சிறப்பான ஆட்டம்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்