search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world"

    • கோ. பூஜை, மகா கணபதி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள க.கிருஷ்ணாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டி ருத்ர காளி மற்றும் பகளாமுகி மகா யாகம் நடைபெற்றது.

    இதில் கோ. பூஜை, மகா கணபதி பூஜை, கன்னியா பூஜை, மகா வேள்வி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மகா யாகத்தை பாலக்காடு கல்பாதி ருத்ரகாளி மடம் பாஸ்கரசர்மா சாமிகள் நடத்தி வைத்தார். இதில் சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ.,பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி, கேத்தனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.என்.வெங்கிடபதி, உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
    • செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது .

    ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டினர்.

    மேலும் அவர் பேசுகையில் " சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டு கனிவான சேவையை வழங்கி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

    முன்னதாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா சரவணன் ஆகியோர் செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபுராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க.
    • ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்.

    பூமி இருக்கும் காலக்ஸியின் பெயர் பால்வீதி. பால்வீதியில் சுமாரா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதியின் நடுவே ஒரு கருந்துளை இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த லட்சம் கோடி நட்சத்திரங்களும் இந்த கருந்துளையை தான் சுத்தி வந்துகிட்டு இருக்கு.

    நமக்கு அருகாமையில் அன்ட்ரோமிடான்னு இன்னொரு காலக்ஸி இருக்கு. அது பால்வீதியை விட பெரியதுன்னு சொல்றாங்க. இந்த காலஸிக்கள் எல்லாமே விண்வெளியில் எங்கோ போய்கிட்டே இருக்கு. எங்கே போகுதுன்னு யாருக்கும் தெரியாது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 21 லட்சம் கிமி வேகத்தில் காலக்ஸிகள் எங்கோ பயணம் பண்ணிகிட்டு இருக்கு.

    இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க. ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆக இன்னும் 500 கோடியாவது ஆண்டில் மனிதர்கள் இருக்காங்களோ இல்லையோ, ஏதோ உயிரினம் பூமியில் இருக்கும்.

    தலா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ள இரு காலக்ஸிகள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?

    "பெருசா ஒன்றும் ஆகாது" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    ஏனெனில் காலக்ஸிக்களின் நட்சத்திரங்களுக்கு இடையே இருப்பது பெரும்பாலும் வெற்றுவெளிதான். அதாவது ஒரு காலக்ஸியில் 99.2% வெறும் வெளிதான். மீதம் உள்ள 0.8% தான் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்.

    ஆக இந்த மோதல் நிகழ்கையில் விண்ணை பார்த்தால் திடீர் என வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். புதுசா ஏராளமான நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றும். சில நட்சத்திரங்கள் மோதி கிலோனோவா (Kilonova) எனும் வானவேடிக்கை நிகழலாம். பார்த்தால் ஒரே ஜாலியா இருக்கும்.

    அப்ப நாம மனித வடிவில் இருக்கமாட்டோம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் இருந்து விண்ணை உற்றுபார்த்துக்கொண்டிருப்போம்.

    ரோபாட் வடிவில் உட்கார்ந்து விண்ணைபார்த்துவிட்டு நோட்ஸ் எழுதிகிட்டு கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?

    - நியாண்டர் செல்வன்

    • கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது.
    • பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து உலக மனித உரிமை தின விழாவை கீழக்கரையில் நடத்தியது.

    மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன் தலைமை தாங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஷேக்இப்ராஹிம் சாதனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான முஹம்மது சாலிஹ் ஹுசைன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் ஆகி யோர் பேசினர். சட்டம் சம்பந்தமான பொது மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபீர் சுலைமான் நன்றி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இதில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது.
    • நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதிசெல்வன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராதா, செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.

    முதன்மை செயல் அதிகாரி அரவிந்த், முதல்வர் அனுசுயா, துணைமுதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா வரவேற்றார். நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள், நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். நீரின் அவசியம் குறித்து கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.

     காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. 

    ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார். #IPL2019 #Ganguly #ShikharDhawan
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.

    20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.

    வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.

    இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.

    உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  #IPL2019 #Ganguly #ShikharDhawan
    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InernationalYogaDay
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.



    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.

    21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.

    தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.

    பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Yoga #InernationalYogaDay
    ஜன்தன் யோஜனா திட்டம் நல்ல வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. #UnbankedPopulation #IndianBankingSystem
    புதுடெல்லி:

    இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றபிறகு, முன்வைப்புத் தொகை எதுவும் இன்றி ஏழைகள் வங்கிக் கணக்கை தொடங்கலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்க வழி வகை செய்யப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் வங்கி கணக்கு தொடங்கினர்.



    இந்நிலையில், வங்கிக் கணக்குகள் தொடர்பான உலகளாவிய ஒப்பீடு வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மக்களின்  எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், உலக அளவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2014-ம் ஆண்டு வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 53 சதவீதமாக இருந்தது. அது 2017ல் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், 191 மில்லியன் மக்களுக்கு (19.1 கோடி) வங்கி கணக்கு இல்லை. இது, வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 224 மில்லியன்மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. பாகிஸ்தான் 99 மில்லியன் மக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. #UnbankedPopulation #IndianBankingSystem

    உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.



    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

    டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    ×