search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International"

    • உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலைகளையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.
    • கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணாகர பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    'நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலை களையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.

    உங்கள் இலக்கை அடைய என்னென்ன சக்திகள் தேவை' என்பதை விளக்கி ஒருவர் ஒரு கடிதம் எழுதலாம்.கட்டாயமாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கலாம். 800 வார்த்தைகளுக்கு மிகாத கிடதமாக எழுத வேண்டும்.

    ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட மொழியில் எழுதலாம். இப்போட்டியில் சர்க்கிள் அளவில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 25,000 ரூபாய், 10,000 ரூபாய், 5,000 ரூபாயும், சர்வதேச அளவிலான போட்டியில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 50,000 ரூபாய், 25,000 ரூபாய், 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடி தங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.

    அதற்கான விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், 'எஸ்.பி.ஓ., – ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரியில் வரும், 13-க்குள் கிடை க்கும்படி வழங்க வேண்டும்.

    கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை நடைபெறவுள்ளன.
    • மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப தமிழ்க் கற்பித்தல் முறைகளில் புதுமையையும், தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளன.

    இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் கூறியிருப்பதாவது:-

    மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப தமிழ்க் கற்பித்தல் முறைகளில் புதுமையையும், தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.

    எனவே, 21 ஆம் நூற்றாண்டுத்திறன்களை அடிப்படையாகக் கொண்டு உயா் கல்வி மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தமிழ்க் கற்பித்தல் முறைகள் நவீன ஆய்வு நுட்பங்கள் பற்றி அறிவியல்ரீதியான கருத்துகளை வெளிக்கொணரும் நோக்கில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை மற்றும் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

    இதில், பல்வேறு நாடுகளிலிருந்தும், தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் கருத்தாளா்கள், கல்வியாளா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்கின்றனா்.

    மேலும், 64 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன.

    இவற்றில் 45 கட்டுரைகள் தமிழிலும், 19 கட்டுரைகள் ஆங்கிலத்திலும் உள்ளன.

    இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 605 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கோவை தொடக்க விழாவில் வெளியிடப்படும்.

    தவிர, பேராசிரியா் சின்னப்பன் எழுதிய திருநங்கைகள் வாழ்வியல், தமிழ் இலக்கண, இலக்கி யங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா் சித்தரிப்பு ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி வழங்கும் கலைகள் வழி விழுமியங்களைக் கற்பிக்கும் கலை விழா நடைபெறவுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது.

    மதுரை

    மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது.

    மதுரை விமான நிலை யத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.

    இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன.

    அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

    மத்திய அரசு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பயணியர் சேவை உதவியாளர்களாக, மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்த உள்ளது. இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் மதுரை-மலேசியா வழித்தடத்தில் நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இது வியாபாரிகள் மற்றும் விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர். சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வர முடியும்.

    வேளாண் விளை பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிட்டும். பிற நாடு களுடனான விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் ஒரு ''பாயின்ட் ஆப் கால்'' ஆக சேர்க்கப்பட வேண்டும்.

    சர்வதேசவிமான பயணத்தில் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர், குவைத், இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்த்து, பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேசப் பள்ளியில் 12-ம் ஆண்டு தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு விழா பள்ளி நடந்தது. தாளாளர் சத்யன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காரைக்குடி தேசிய மாணவர் படை பட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் ரஜனீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    மழலையர்கள் கைகளில் பூக்கள் ததும்பும் மலர் நடனம், உடற்பயிற்சி நடனம், வானவில் தோரண நடனம், மேற்கத்திய நடனம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிர்வாக அதிகாரி பாலாஜி நன்றி கூறினார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    தஞ்சாவூர்:

    மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரைனிபாப்ஸ் சர்வதேச அபாக்கஸ் பயிற்சி நிறுவனம் நடத்திய சர்வதேச அபாக்காஸ் ஒலிம்பியாட் போட்டியில் 15 உலக நாடுகளில் உள்ள 3 முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகள் 1400 பேர் கலந்து கொண்டனர்.

    அதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தஞ்சை மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் .

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பிரைனிபாப்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு தலைவர் ஜோதிபாசு மற்றும் தஞ்சை கரந்தை கிளை நிறுவனர் யோகேஸ்வரி செய்திருந்தனர்.

    • நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
    • நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

    கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

    சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.

    • சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
    • இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சத்தியமங்கலம்:

    சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புலிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் புலி மாஸ்க் அணிந்தும் பேரணியாக சென்றனர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வடக்குப்பேட்டை, ஆற்றுப்பாலம், பஸ்நிலையம் வாய்க்கால் மேடு வழியாக மாவட்ட வன அலுவலகத்தை அடைந்தது.

    இந்த பேரணியில் சத்தியமங்கலம் வன அலுவலர் தீபக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InernationalYogaDay
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.



    4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.

    21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.

    தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.

    பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Yoga #InernationalYogaDay
    ×