search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது.
    • அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 விஷயங்களின் தொகுப்புகளை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் 2 வகை உண்டு.

    தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.

    ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது. எதன் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ஜோதிடர்கள், பஞ்சாக கணிப்பாளர்கள், ஆன்மீக வாதிகள்தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறியிருப்ப தாவது:-

    விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை.

    செப்டம்பர் 18-ந் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி 19-ந் தேதி காலை 11.44 மணிக்கு முடிவடைகிறது.

    இந்த சதுர்த்தி நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தில் 18-ந் தேதி தான் விநாயகர் சதுர்த்தி இதில் எந்த மாற்றமும் இல்லை. வட மாநிலங்களில் 19-ந் தேதி கொண்டாடப்படலாம். அங்கு அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள்.

    விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

    இதேபோல் மேலும் ஜோதிடர்கள் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் செப்.18-ந் தேதி தேரோட்ட மும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த் தியை கொண்டாடு வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கோவில்களிலும் செப்டம்பர் 18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளைதான் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜோதி டர்கள், ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    • சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
    • எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர்.

    முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.

    நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.

    அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    • ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிகாமணி வரவேற்றார். பாலமுருகன், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை நடந்தது.
    • மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம்-மதுரைரோட்டில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் முன்புள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் வளாகத்தில் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.

    இதில் முக்கிய பிரமுகர்கள், பிரபல தொழில் அதிபர் குவைத்ராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.

    • எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
    • விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன.

    சோழவந்தான்

    சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி பூசாரி சேகர் தலைமையில் மூலவருக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட 22 வகையான திரவ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. சந்தனகாப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் மேற்கு பகுதியில் பழமை வாய்ந்த சதுர்வேத மஹாகணபதி கோவிலில் உள்ள மூலவருக்கு அர்ச்சகர் கணேசன் தலைமையில் அபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    கோவை 

    கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. பின்னர் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிரதம் உள்பட 11 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். இந்த விநாயகர் 19½ அடி உயரம், 11½ அகலம், 190 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆசியாவிலேயே முதல் சிலையாகும்.

    கோவை அருகேயுள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி காலை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. வடவள்ளி ஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

    இதேபோல், ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோவில், காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில், பேரூர் படித்துறை விநாயகர் கோவில்களிலும், நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதுதவிர வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை, சுண்டல் பொரி கடலை படைத்து வழிபட்டனர்.

    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சாலைகளில் போலீசார் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று நெல்லை டவுன் ஆர்ச் முன்பிருந்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கவச உடையணிந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    ஆர்ச் முன்பு தொடங்கிய அணிவகுப்பு பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு வழியாக 4 ரத வீதிகள் சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு முடி வடைந்தது.

    • சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
    • 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடுவது வழக்கம். மேலும் கொழுக்கட்டை, அவல், சுண்டல், சக்கரை பொங்கல், கரும்பு, பழ வகைகளை வைத்து படையலிடுவார்கள், 3-ம் நாள் நீ ர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும்.

    விநாயகர் சிலைகள்

    விநாயர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் தற்போது விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது. சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி, குரங்குச்சாவடி, உத்தமசோழபுரம், வின்சென்ட், கடை வீதி, குகை, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இதில் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ைவக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை பொது மக்கள்அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். 100 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    விற்பனை அதிகரிப்பு

    குறிப்பாக லிங்க விநாயகர், ராஜ அலங்காரம், நாராயண விநாயகர், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, ராஜகணபதி, சயனவிநாயகர் உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டி உள்ளது.

    மேலும் விநாயகர் சதுர்த்தி பூைஜக்கு தேவையான அவல், கொண்டை கடலை, பழங்கள்,அரிசி, சர்க்கரை, பூக்கள் விற்பனையும் அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை அதிகமாக இருந்தது . ஆனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொருட்கள் வாங்க பொது மக்கள் கடை வீதிகளில் திரண்டனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியது.  

    • 1,500 போலீஸ் குவிப்பு
    • ஊர்வல பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்ட அளவில் விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், சிலைகளை கரைக்க உள்ள ஏரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக்கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூத்தி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இதில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 2-ந் தேதி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விழாவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

    அனைத்து ஊர்வல பாதையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ×