search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "football"

    • நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி 3-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கானகோப்பையை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள். போட்டியினை விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்தினர்.

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    மானாமதுரை

    75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

    மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி போட்டியை பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு), பொருளாளர் அப்துல் அஹது தலைமை தாங்கினர். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லா கான் தலைமையுரையாற்றினார்.

    சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    இறுதி போட்டியில் கேரள மாநிலத்தின் கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது. கோவை ரத்தினம் கல்லூரி அணி 2-ம் இடத்தை பெற்று 6 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.

    கேரள மாநிலம் திருச்சூர் எம்.டி.கல்லூரி அணி 5 அடி உயர பரிசுகோப்பையுடன், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று 3-ம் இடம் பெற்றனர். 4-ம் இடத்தை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 5ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றது.

    சிறந்த வீரருக்கான பரிசை கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானானும், சிறந்த கோல்கீப்பர் பரிசை சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வினும் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஷபினுல்லாஹ் கான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் முஹம்மது அலி, செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    • இந்திய அணி அடுத்ததாக ஹாங்காங் அணியுடன் மோதுகிறது
    • ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.

    கொல்கத்தா:

    ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியின் 3வது சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

    போட்டியின் 83வது நிமிடத்தில் இந்திய கால்பந்து நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் சம நிலை ஆனது.

    இதையடுத்து போட்டி நிறைவடைய சில நொடிகள் இருந்த போது இந்திய வீரர் சாஹல் அப்துல் சமத் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்று விளையாடுவதை இந்திய அணி உறுதி செய்துள்ளது. தகுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை மறுநாள் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

    தெற்காசிய அணிகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி நேபாள அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    புதுடெல்லி:

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்ஏஎப்எப்) சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுத வரை முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

    இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று நேபாள அணியை இந்திய அணி எதிர்கொண்டது. காத்மாண்டு ஏஎன்எப்ஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 18-வது நிமிடத்தில் இந்தியா கோல் அடித்தது. அதன்பின்னர் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இறுதியில் இந்தியா 1-0 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான தியரி ஹென்றி மொனாகோ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #ThierryHenry
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் தியரி ஹென்றி. பிரான்ஸ் அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 51 கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் இவர்தான்.

    இவர் மொனாகோ, யுவான்டஸ், அர்செனல், பார்சிலோனா, நியூயார்க் ரெட் புல்ஸ் ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.



    பெல்ஜியம் தேசிய அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்த ஹென்றி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் மொனாகோ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஜூலை மாதம் வரை மூன்று வருடம் மொனாகோ அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். நாளைமறுநாள் முதல் தனது பணியை மேற்கொள்ள இருக்கிறார்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன. #WorldCupFinal #FRACRO
    மாஸ்கோ:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.

    இந்த நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் யுத்தத்தில் இறங்குகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. கிரிஸ்மான் (3 கோல்), ‘இளம் புயல்’ கைலியன் பாப்பே (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட், ரபெல் வரானே உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள், களத்தில் இறங்கி விட்டால் புயல்போல் சுழன்று எதிரணியை உலுக்கி விடும் திறமை படைத்தவர்கள். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்சுக்கே இப்போது வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.


    அரைஇறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத பிரான்ஸ் அணியினர், அதன் பிறகு முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இது மந்தமான யுக்தி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்சும் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.

    இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது. மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.


    தங்கப்பந்து விருது வெல்லும் வாய்ப்பில் உள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் உலகின் தலைச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இவான் பெரிசிச், மரியோ மான்ட்ஜூகிச், வர்சல்ஜ்கோ ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். முதல்முறையாக இறுதி சுற்றை அடைந்துள்ள குரோஷியா, உலக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கும்.

    இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் விளங்குவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் முதல் கோல் போடும் அணியின் கை எளிதில் ஓங்கிவிடும். இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.


    கடைசியாக நடந்த மூன்று உலக கோப்பை இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட்-அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2-வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

    இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-


    பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் கீப்பர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

    குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் கீப்பர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #WorldCup #WorldCupFinal #WorldCup2018 #FrancevsCroatia #FRACRO
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து, சாம்பியன் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்து தெரிவித்துள்ளது. #BritishAirways #WorldCup
    லண்டன்:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து, குரோசியா மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில், 14-ம் தேதி இரவு நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நிச்சயமாக இங்கிலாந்து விளையாடும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்தை தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு 15-ம் தேதி அணி வருகிறது என்பதை குறிக்கும் வகையில் போர்டிங் பாஸ் வடிவிலான அந்த வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.
    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிட்டால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பைனலை பார்க்க வரலாம் என பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். #ThaiCave #FIFA
    மாஸ்கோ:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், அவர்களை முழுவதுமாக மீட்க சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 13 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படுவர் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்காக பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், 13 பேரும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த பின்னர், அவர்கள் உடல்நிலை ஒத்துழைத்தால் அவர்கள் அனைவரும் ரஷியாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரலாம் எனவும் கடிதத்தில் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

    இதேபோல, உலகின் பல முன்னணி கால்பந்து கிளப்புகளின் தலைமை நிர்வாகிகளும் தாய்லாந்து மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் குரல்களை தெரிவித்துள்ளனர். 
    தென்கொரிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இரண்டு ரஷிய இளம்பெண்கள் முத்தம் கொடுத்துள்ள நிகழ்வு கிண்டல்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. #Russia #WorldCup
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் செய்தியாளர்கள் ரஷியாவில் குவிந்துள்ளனர். பெண் செய்தியாளர்கள் கேமரா முன்னால் நின்று பேசும் போது, பல இளைஞர்கள் குறும்பாக அவர்களுக்கு முத்தம் கொடுக்கின்றனர்.

    சிலர் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டலின் நாகரீக வடிவம் இது என பலர் பெண்ணிய ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தென்கொரிய தொலைக்காட்சியை சேர்ந்த ஆண் பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்கோ நகரில் கால்பந்து போட்டி குறித்து கேமரா முன் விவரித்து கொண்டிருந்தார்.



    அப்போது, இரண்டு ரஷிய இளம்பெண்கள் அடுத்தடுத்து அவரது கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த காட்சி நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முத்தம் வாங்கிய அந்த பத்திரிகையாளர் வெட்கத்துடன் சிரித்து கொண்டார்.

    ‘அடிச்சது பார் யோகம்’ என பலர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்க, பலர் பொங்கியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆண்கள் முத்தம் கொடுத்தால், அது பாலியல் சீண்டல் என்றால், இதுவும் பாலியல் சீண்டலே ஆனால் இதனை யாரும் கண்டிக்க மறுக்கின்றனர் என பலர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கால்இறுதி ஆட்டங்கள் 6-ந்தேதி தொடங்குகிறது. #WorldCup2018 #QuarterFinals
    நோவ்காகிராட்:

    உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 28-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, சுவீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியன் ஜெர்மனி, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால்இறுதி ஆட்டங்கள் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் பிரான்ஸ்- உருகுவே, பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி நடைபெறும் கால்இறுதிகளில் இங்கிலாந்து-சுவீடன், ரஷியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #WorldCup2018 #QuarterFinals
    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    ×