search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Super League"

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    டெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IndianSuperLeague

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ChennaiyinFC #ATK #ISL2018
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

    கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன. #ISL2018
    புதுடெல்லி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3), 3-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும் (3-4) அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் புனேவுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வியும், 3-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் கேரளாவுடன் டிராவும் கண்டது.

    கவுகாத்தி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றாலும், தடுப்பு ஆட்டத்தில் செய்த தவறால் தோல்வியை சந்தித்தது. தடுப்பு ஆட்டத்தில் சென்னை அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். சென்னை, டெல்லி அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சென்னை, டெல்லி அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் டெல்லி அணி 4 முறையும், சென்னை அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இதற்கிடையில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 41-வது மற்றும் 43-வது நிமிடத்திலும், மிகு 64-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். புனே அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் அந்த அணி டிரா கண்டு இருந்தது. #ISL2018
    10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., எப்.சி.கோவா, மும்பை சிட்டி எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் 18 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கவுகாத்தி, டெல்லி, கொச்சி, சென்னை, ஜாம்ஷெட்பூர், புனே, கோவா ஆகிய 10 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. லீக் சுற்றில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம்பெறுகிறது. இதுவரை 59 லீக் ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும். மார்ச் மாதத்தில் இறுதிப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரில் அக்டோபர் 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும், நவம்பர் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், டிசம்பர் 17-ந் தேதி முதலும் இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தயாராவதற்கு வழிவிடும் நோக்கில் இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மானுல் லான்ஜரோட் தலைமையிலான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சந்தேஷ் ஜின்கான் தலைமையிலான கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது.

    கொல்கத்தா 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. அந்த 2 முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி கேரளாவை வீழ்த்தி தான் பட்டத்தை தனதாக்கியது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா அணி 5 முறையும், கேரளா அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 4 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. கடந்த சீசனில் மோசமாக விளையாடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட கொல்கத்தா அணி இந்த தடவை பல புதிய வீரர்களுடன் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகியுள்ளது.

    போட்டி குறித்து கொல்கத்தா அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கோப்பெல் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போதுமான அளவில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தங்களது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். எங்கள் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரில் கேரளா-கொல்கத்தா அணிகள் இடையிலான மோதல் பெரியதாகும். இரு அணிகளும் 2 முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரு ஆட்டத்திலும் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இரண்டு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த ஆட்டம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்க்கும் என்று கருதுகிறேன். கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த அணியை வீழ்த்துவது மட்டுமே இந்த சீசனில் முன்னேற போதுமானது கிடையாது’ என்றார்.

    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனக்குரிய பங்குகளை விற்று விட்டதால் இந்த முறை அணியுடன் அவரது பயணம் இருக்காது. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் காணும் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. மலேசியா மற்றும் கோவாவில் பயிற்சி முடித்து திரும்பி இருக்கும் சென்னை அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

    சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணி ரூ.4 கோடியும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகள் தலா ரூ.1½ கோடியும் பரிசாக பெறும்.  #ISL2018 #ATKvKBFC

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருகிற திங்கட்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்கள். பயிற்சி முகாம் பயணத்துக்காக சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ஏற்கனவே சென்னை வந்து விட்டார். 

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சென்னையின் எப்.சி. அணியின் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மலேசியா செல்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு சென்று அணியினருடன் இணைகிறார்கள்.

    மலேசியாவில் 4 வாரம் பயிற்சியில் ஈடுபடும் சென்னையின் எப்.சி. அணியினர் அங்குள்ள அணியுடன் 4 நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எப்.சி. அணி செப்டம்பர் 11-ந் தேதி சென்னை திரும்புகிறது.  #ChennaiyinFC
    ×