search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennaiyin FC"

    • அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

    சென்னை:

    10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

    57 வயதான ஓவென் கோயல் கூறுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது.
    டாக்கா:

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல குரூப் (இ பிரிவு) சுற்றில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அபாகானி லிமிடெட் டாக்கா (வங்காளதேசம்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது. வங்காளதேச அணியில் கெர்வென்ஸ் பெல்போர்ட் 64-வது நிமிடத்திலும், மாசிக் சைஹானி 69-வது நிமிடத்திலும், மாமனுல் இஸ்லாம் 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னையின் எப்.சி. அணியில் வினீத் 6-வது நிமிடத்திலும், ஐசக் வன்மால்சாவ் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள். சென்னையின் எப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கவுகாத்தியில் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #ISL2019 #ChennaiyinFC #BengaluruFC
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியனான சென்னை அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. 32-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் போட்டது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா 4 பின்கள வீரர்களை போக்கு காட்டி இந்த கோலை அடித்தார்.

    43-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோலை அடித்து தனது முன்னிலையை அதிகரித்தது. சென்னை வீரர் ரெந்த்லே கோலை நோக்கி அடித்த பந்தை பெங்களூரு அணியின் பின்கள வீரர் தடுக்காமல் கோட்டை விட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட கிரிகோரி நெல்சன் மின்னல் வேகத்தில் பந்தை அடித்து கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.



    பின் பாதியில் பதில் கோல் திருப்ப பெங்களூரு அணி ஆக்ரோஷமாக போராடியது. இதன் பலனாக 57-வது நிமிடத்தில் பெங்களூரு அணி பதில் கோல் திருப்பியது. சக வீரர் ஸிஸ்கோ ஹெர்னான்டஸ் கடத்தி கொடுத்த பந்தை சுனில் சேத்ரி கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவை சாய்த்தது.

    15-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 2 டிரா, 11 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடருகிறது. இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது தான். அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் அதன் சொந்த மண்ணில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 15-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 9 வெற்றி, 4 டிராவுடன் அந்த அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 74-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி.யை சந்தித்தது. 16-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி முதல் கோல் அடித்தது.



    அந்த அணி வீரர் டேனியல் இந்த கோலை அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் ரபெல் அகஸ்டா பதில் கோல் திருப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற் பாதியின் கடைசி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் பிக்ரம்ஜித் சிங் 78-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு சென்னை அணி கோல் அடிக்க போராடினாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.

    12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஏற்கனவே 4 டிராவும், 7 தோல்வியும் கண்டு இருந்தது. 12-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.



    இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.

    விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.



    பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC #ATK 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ChennaiyinFC #ATK #ISL2018
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

    கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.



    உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.

    பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எப்.சி. அணி மூன்றாவது வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #ISL2018 #ChennaiyinFC
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியது.

    3-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் காலு உச்சே கோல் அடித்தார். 13-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கொல்கத்தா அணியின் ஜான்சன் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 50-வது கோல் இதுவாகும். 17-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கார்லோஸ் சலோம் கோல் திருப்பினார். முதல் பாதியில் கொல்கத்தா முன்னிலை வகித்தது.

    பிற்பாதியில் பந்து அதிக நேரம் சென்னை அணியினரின் வசம் சுற்றினாலும் அதிர்ஷ்டம் இல்லை. முடிவில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. எதிரணி கோல் எல்லையை நோக்கி சென்னை அணி வீரர்கள் அடித்த 5 ஷாட்களில் ஒன்றை தவிர மற்றவை வீணானது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை சந்தித்த 4-வது தோல்வி இது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    ×