என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்
Byமாலை மலர்5 Dec 2018 9:14 PM GMT (Updated: 5 Dec 2018 9:14 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
மும்பை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X