search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "match"

    • 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சி.எஸ்.கே.-பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனையானது.

    இது தொடர்பான வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
    • இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 2-வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத் டைடன்சுடன் மோதுகிறது.

    இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000 விலைகளிலும் டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    டிக்கெட் வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ரூ.1,700, ரூ.6 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் விற்றன. அதைத் தொடர்ந்து ரூ.2,500, ரூ.3,500 விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் முழுமையாக விற்றன. கடைசியாக ரூ.4000 விலையிலான டிக்கெட்டும் விற்றன.

    விற்பனை தொடங்கிய 1½ மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
    • நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

    நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.

    அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு படுகர் நல சங்க சார்பில் படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் சுண்டட்டி அணியும், உல்லாடா அணியும் விளையாடியது.

    இதில் உல்லாடா அணி 1 கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து சுண்டட்டி அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து அன்ணிகொரை அணியும், அரக்கம்பை அணியும் விளையாடியது. இதில் அன்ணிகொரை அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இளித்தொரை அணியும், கடைகம்பட்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப் பிரேக்கர் முறையில் இளித்தொரை அணி வெற்றி பெற்றது.

    முன்னதாக பொரங்காடு படுகர் நல சங்க நிர்வாகிகள் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை,

    பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான யல்லோ வாரியர்ஸ் என்ற அணியும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் என்ற அணியும் மோதியது.

    முதல் போட்டியில் டாஸ் வென்ற யல்லோ வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ பைட்டர்ஸ் அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்சர், 3 ஃபோர்கள் உள்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    2-வது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ பைட்டர்ஸ் அணி பவுளிங்கை தேர்வு செய்தது. யல்லோ வாரியர்ஸ் அணி நிர்ணி யிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னு பேபி 29 பந்துகளில் 10 சிக்சர், 2 போர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 போர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

    32-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இரு அணியினரை நகர செயலாளர் கே.பி. எஸ் பழனியப்பன முன்னிலையில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து ேபாட்டியை தொடங்கி வைத்தனர். முதல் பரிசை துவார் அணியும், 2-ம் பரிசை குளத்துப்பட்டி அணியும், 3-ம் பரிசை துவார் செந்தில் நினைவு குழு அணியும், 4-வது பரிசை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் தட்டிச் சென்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி சின்னையா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், குளத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்சேதுராமன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், துவார் முக்கையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜலாலுதீன், நடராஜன், பேரூர் கவுன்சிலர்கள் அழகு, அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன், துணை அமைப்பாளர் வீரமணி, மன்சூர், விக்னேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

    • நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி 3-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கானகோப்பையை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள். போட்டியினை விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்தினர்.

    • முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது

    உடன்குடி:

    முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.

    போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது. 2 -வது பரிசை குலசேகரன்பட்டினம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது, 3-வது பரிசை அகரம் அணி பெற்றது.

    4-வது பரிசு திருச்செந்தூர் அருண்பாண்டி அணியினருக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஊராட்சி துணைத்தலைவர் கணேசன் , வள்ளி குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், அப்துல் ஹமீது, தொழிலதிபர் முத்துக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    காரைக்குடி

    காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் 8-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானங்களில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் அணியும், காரைக்குடி மூன்லைட் அணியும் மோதியதில் கெமிக்கல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர்நாயகனாக கெமிக்கல்ஸ் அணியின் பார்த்தசாரதியும், பந்து வீச்சாளராக ராமச்சந்திரனும், ஆல்ரவுண்டராக நைட்ஸ் அணியின் சிவசங்கரும், சிறந்த பயிற்சியாளராக அழகப்பா கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், தொழிலதிபர் செந்தில்குமார், பள்ளத்தூர் சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சங்கர், துணை தலைவர் பெஸ்ட் பாண்டியன், லத்தீப் மெமோரியல் அணி செயலாளர் சிவானந்தம், பழமலை, திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×