search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன் பட்டினத்தில்  மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.


    குலசேகரன் பட்டினத்தில் மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

    • முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது

    உடன்குடி:

    முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.

    போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது. 2 -வது பரிசை குலசேகரன்பட்டினம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது, 3-வது பரிசை அகரம் அணி பெற்றது.

    4-வது பரிசு திருச்செந்தூர் அருண்பாண்டி அணியினருக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஊராட்சி துணைத்தலைவர் கணேசன் , வள்ளி குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், அப்துல் ஹமீது, தொழிலதிபர் முத்துக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    Next Story
    ×