search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெண் போலீசார் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி
    X

    கோவையில் பெண் போலீசார் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

    • பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை,

    பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான யல்லோ வாரியர்ஸ் என்ற அணியும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் என்ற அணியும் மோதியது.

    முதல் போட்டியில் டாஸ் வென்ற யல்லோ வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ பைட்டர்ஸ் அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்சர், 3 ஃபோர்கள் உள்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    2-வது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ பைட்டர்ஸ் அணி பவுளிங்கை தேர்வு செய்தது. யல்லோ வாரியர்ஸ் அணி நிர்ணி யிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னு பேபி 29 பந்துகளில் 10 சிக்சர், 2 போர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 போர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×