நெற்குப்பையில் கிரிக்கெட் போட்டி

நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.
நெற்குப்பையில் கிரிக்கெட் போட்டி
Published on

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

32-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இரு அணியினரை நகர செயலாளர் கே.பி. எஸ் பழனியப்பன முன்னிலையில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து ேபாட்டியை தொடங்கி வைத்தனர். முதல் பரிசை துவார் அணியும், 2-ம் பரிசை குளத்துப்பட்டி அணியும், 3-ம் பரிசை துவார் செந்தில் நினைவு குழு அணியும், 4-வது பரிசை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் தட்டிச் சென்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி சின்னையா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், குளத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்சேதுராமன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், துவார் முக்கையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜலாலுதீன், நடராஜன், பேரூர் கவுன்சிலர்கள் அழகு, அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன், துணை அமைப்பாளர் வீரமணி, மன்சூர், விக்னேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com