search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance aid"

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

    கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    கோப்புப்படம்

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

    நீரில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், கொண்டையாம்பாளையம் கிராமம், கள்ளிப்பட்டி புதுப்பாலம் அருகே 15.9.2018 அன்று தண்டபாணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன் மற்றும் அய்யாசாமி என்பவரின் மகன் தமிழரசன் ஆகிய இருவரும் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், கல்குளம் மதுரா சூரிய பிள்ளையார் குப்பம் கிராமத்தில் 17.9.2018 அன்று கிணற்றின் மீது ஏறி குடிநீர் எடுக்கும் போது, கிணற்றின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில், சங்கர் என்பவரின் மனைவி சசி, செல்லமுத்து என்பவரின் மனைவி மங்கை மற்றும் ஏழுமலை என்பவரின் மனைவி கமலா ஆகிய மூன்று நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    நீரில் மூழ்கி உயிரிழந்த சௌந்தர்ராஜன், தமிழரசன், சசி, மங்கை மற்றும் கமலா ஆகிய ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரகுராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிர்மலா மற்றும் அவரது மகன் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாடனின் மகன் காசி, மகள் ஆனந்தி இருவரும் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

    திருவாரூர் திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் பாண்டவையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியும், மதுரை கிழக்கு மதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முத்து வீரகணபதி மற்றும் வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விபத்துக்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது உயிரிழந்தார்.

    கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் அருவியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

    போடிநாயக்கன்பட்டி கிராம உட்கடை பேட்டை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில், சாலை விபத்தில் ஜெயலட்சுமி, ஸ்ரீநிதி, ஆனந்தகிருஷ்ணன், நடராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

    ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    தேவணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேவியர் பிரைட்டன் குமார் ஆழியார் அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் தர்ஷினி ஆலய திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில், உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.திப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி மூக்கம்மாள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரியபாடி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம். கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாசாணி. திருப்பூர் மாவட்டம், பெதப்பம் பட்டியைச் சேர்ந்த மாயவன் மனைவி ஜெயா. அரியலூர் மாவட்டம், த.சோழங்குறிச்சி மஜீரா காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன்.

    திருவாரூர் மாவட்டம், ராமநாதன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த தங்க பாண்டியன். தேனி மாவட்டம், பண்ணைபுரம் கிராம உட்கடை பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த பெருமாள். தூத்துக்குடி மாவட்டம், மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். நாமக்கல் மாவட்டம், மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொம்முலு மனைவி சாத்தம்மாள்.

    திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த செந்தில்குமார். திருநெல்வேலி மாவட்டம், கீழபிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி முத்து. திருநெல்வேலி மாவட்டம், கீழச்சுரண்டை பகுதியைச் சேர்ந்த சமுத்திரம். காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பல்லாவரம் யூனியன் கார்பைடு காலனியில் வசித்து வந்த சண்முகம். கடலூர் மாவட்டம், புலியூர் கிழக்கு மதுராசமட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    மதுரை மாவட்டம், குமாரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் மகள் தட்சணா பாம்பு கடித்து உயிரிழந்தார்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணமலை கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிருஷ்ண மூர்த்தி, சந்தவாசலில் பணிபுரிந்த கணபதி, சாத்தனூர் அணையில் பணிபுரிந்த சந்திரன், திருக்காட்டுப் பள்ளியில் பணிபுரிந்த மதிவாணன், வேலாயுதம்பாளையத்தில் தலைமைக் காவலர் சிவசுப்பிரமணியன், வத்தராயிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, திருச்சியில் போக்குவரத்துபிரிவு, சிறப்பு உதவிஆய்வாளர் சீராளன், கீழச்சீவல்பட்டியில் தலைமைக் காவலர் அண்ணாதுரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, ஆற்காட்டில் பெண் தலைமைக் காவலர் அருள்மொழி, மற்றும் வேட்டைக்காரனிருப்பில் உதவிஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

    ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலைமை காவலராகப் பணிபுரிந்த மகேந்திரன், தூத்துக்குடி மாவட்டம், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறையில் அவில்தாராகப் பணிபுரிந்த முருகேஷ் ஸ்ரீகாந்த், ஆழ்வார்திருநகரில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பால்ஐசக், சந்தவாசலில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தசரா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ் இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு செல்லும்போது காட்டு யானை தாக்கியதில் உயிர் இழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிர் இழந்த மாதேஸ் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான்சன் அலெக்ஸ்.

    நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்.

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பார்த்திபன்.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்லபாண்டி.

    ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மர்.

    சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காமராஜ்.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரகாந்த் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெய் சங்கர்.

    ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனராஜ்.

    கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தனபால்.

    நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்.

    மதுரை மாநகரம், கூடல் புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமாதேவி.

    ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

    விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேச பாண்டி.

    காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன்.

    நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம்.

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சதீஷ்வரன்.

    சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை1, ‘ஈ’ நிறுமம், 23ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.


    எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய திரு. ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  #CoimbatoreStudent #Logeshwari 
    மூன்று சக்கர சைக்கிள் கேட்டு தனக்கு கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி செய்யும்படி உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து நேற்று தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு பொருளுதவி செய்ய கடிதம் எழுதியிருந்த அருள் சகாய ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு அருள் சகாயராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    மாற்றுத்திறனாளியான நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் கடைக்கு சென்று வரமுடியாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தேன்.

    இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினால் அவர் உதவி செய்வார் என்று நினைத்தேன். அதன்படி அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பினேன்.

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் செய்த உதவியால் 3 சக்கர சைக்கிளில் இனிமேல் கடைக்கு செல்ல எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    பல்வேறு சம்பவங்களில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறியதாவது:-

    திருவையாறு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த முருகன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

    புவனகிரியை அடுத்த சு. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் மகாலட்சுமி பள்ளி கழிவறையில் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டி அள்ளிதரப்பு குக்கல் மலை கிராமத்தில் இடி தாக்கி இறந்த வித்யா குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், பெரம்பலூர் மாவட்டம் மாவலிங்கை கிராமத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பூபதி, பாரதி ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், ஈரோடு மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ஏரியில் மூழ்கி இறந்த ராஜ்குமார், கவுதம், சஞ்சய் ஆகிய 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி பலியான குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், அருமனை கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின், ஆறுதேசம் கிராமத்தைச் சேர்ந்த பாலையன் மற்றும் மின்சாரம் தாக்கி பலியான திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் தெற்கு கிராமத்தில் வாகன விபத்தில் பலியான செல்வராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், திருவையாறு வரகூர் கிராமத்தில் தீ விபத்தில் பலியான கீர்த்தி குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், புதுக்கோட்டை அனவயல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பலியான தமிழ்செல்வன் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், பொன்னேரியை அடுத்த அமூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பலியான கன்னியப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும் நிவாரணை நிதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #TNCM #Edappadipalanisamy
    மின்சாரம் மற்றும் மண் சரிந்து பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரம் தாக்கி மற்றும் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், பெருமாள் வடக்கு வீதியில் உள்ள வீட்டில் 8.5.2018 அன்று கணேசன் தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பை கொடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது, அவருடைய சகோதரர் ராஜு, தனது அண்ணன் எவ்வாறு இறந்தார் என்பதை காவலர் முன் செய்து காண்பிப்பதற்காக மீண்டும் தொலைக்காட்சி பெட்டிக்கு இணைப்பை கொடுக்க முற்பட்டபோது, அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவ்விருவரும் உயிரிழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் கணேசன் மற்றும் ராஜுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, கணேசன் மற்றும் ராஜு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருவண்ணாமலை மாவட்டம், பொலக்குணம் கிராமத்தில் 31.5.2018 அன்று பாறைகளை வெடிக்கச் செய்து கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், தங்கராஜ் மற்றும் சீதாராமன் ஆகியோர் 31.5.2018 அன்று மண் சரிந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, குமார், தங்கராஜ், சீத்தாராமன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    நிலத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 1-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்ற விபரத்தை இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    ×