search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappdi Palaniswami"

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ் இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு செல்லும்போது காட்டு யானை தாக்கியதில் உயிர் இழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிர் இழந்த மாதேஸ் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    ×