search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர்
    X

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர்

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரியபாடி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம். கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாசாணி. திருப்பூர் மாவட்டம், பெதப்பம் பட்டியைச் சேர்ந்த மாயவன் மனைவி ஜெயா. அரியலூர் மாவட்டம், த.சோழங்குறிச்சி மஜீரா காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன்.

    திருவாரூர் மாவட்டம், ராமநாதன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த தங்க பாண்டியன். தேனி மாவட்டம், பண்ணைபுரம் கிராம உட்கடை பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த பெருமாள். தூத்துக்குடி மாவட்டம், மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். நாமக்கல் மாவட்டம், மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொம்முலு மனைவி சாத்தம்மாள்.

    திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த செந்தில்குமார். திருநெல்வேலி மாவட்டம், கீழபிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி முத்து. திருநெல்வேலி மாவட்டம், கீழச்சுரண்டை பகுதியைச் சேர்ந்த சமுத்திரம். காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பல்லாவரம் யூனியன் கார்பைடு காலனியில் வசித்து வந்த சண்முகம். கடலூர் மாவட்டம், புலியூர் கிழக்கு மதுராசமட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    மதுரை மாவட்டம், குமாரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் மகள் தட்சணா பாம்பு கடித்து உயிரிழந்தார்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    Next Story
    ×