search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    • பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மறியல் செய்திருக்கின்றனர். அவர்களை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்ப டாதது வருத்தமளிக்கிறது.

    பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன்.
    • எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

    மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.
    • அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான சதுரங்க போட்டி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. போட்டியில் கண் பார்வை யற்றோர், செவித்திறனற்றோர், உடல் ஊனமுற்றோர் என 3 பிரிவுகளாக ேபாட்டி கள் நடத்தப்பட்டது. வயது வரம்பின்றி நடந்த இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட சதுரங்க கழக செயலாளர் வின்ஸ்டன் நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கார்மல் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை வின்சென்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    விழாவில் சதுரங்க கழக நிர்வாகிகள் நடராஜன், துணை தலைவர்கள் தட்சனா மூர்த்தி, எப்ரேம் ரெக்ஸ், துணை செயலா ளர்கள் அரவிந்த், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி இன்று தஞ்சாவூர் ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சாலமன் இன்பராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    எஸ். எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி. கே. ஜி .நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் அந்தோணி நிறைவுறையாற்றினார்.

    தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், அக்.31-

    கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதற்கு, பள்ளிகளில் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு, கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    குறைந்த பாதிப்புடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பினையுடைய 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, உள்ளடக்கிய கல்வியின் கீழ்இயங்கும் ஆயத்த பயிற்சி மையம் மூலம் சிறப்பு கல்வி மற்றும் இயன் முறைமருத்துவம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

    வீட்டு வழிக் கல்விபெறும் குழந்தைகளின் உடல்நலம், மனநலம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமானது சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து அனைத்து வட்டார வள மையங்களிலும் நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டதோடு மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது.
    • இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து, காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஸ்டேரிங் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அங்கும்மிங்கும் அலைந்து, சாலையில் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரது 3 சக்கர வாகனத்தில் மோதி, தொடர்ந்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார். அதேபோல், பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து, இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் காரைக்காலை அடுத்த அண்டூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பி லான உபகர ணங்களை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
    • அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் 100-வது பிறந்தநாளையொட்டி, மாவீரன் சுந்தரலிங்கம் அமைப்புசாரா கட்டுமான மற்றும் ஆட்டோ தொழிலாளர் கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடை வழங்கும் விழா இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளரும், புதிய தமிழகம் நகர துணை செயலாளருமான விங்கம் தலைமை தாங்கினார். மாற்றுதிறனாளிகள் நல ஆர்வலர் முத்துகிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ராதாகிருஷ்ணராஜா வரவேற்றார்.

    புதியதமிழகம் மாநில பொதுசெயலாளர் வி.கே.ஐயர் சிறப்புரையாற்றினார். தேவேந்திரர் குல வேளாளர் மகாசபை தலைவர் முத்துக்காளை, மாற்றுத்திற னாளிகளுக்கு சீருடைகளை வழங்கினார். செந்தட்டியாபு ரம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. முடிவில் வனராஜ் நன்றி கூறினார்.

    • காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
    • மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    ராமேசுவரம்:

    சென்னை திருவான்மியூரை சேர்ந்த சேர்ந்த பரத் மோகன்-நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இருந்தபோதிலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவராக வலம் வந்தார்.

    அதேபோல் ஹரிஷ் சிறுவயது முதலே நீச்சலில் கூடுதல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனை அவரது பெற்றோர் சாதனை யாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கி னர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

    உள்ளூர் போட்டிகளில் மனதைரியத்துடன் பங்கேற்ற ஹரிஷ் ஏராளமான பரிசுகளை குவிக்க தொடங்கினார். இதையடுத்து கடலில் நீந்தி சாதனை படைக்க ஹரிஷை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்து ஹரிஷ் மேற்கொண்டார். சிறப்பு பயிற்சியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான அதிக கடல் நீரோட்டம் கொண்ட பாக்ஜலசந்தியை கடக்க முடிவு செய்த ஹரிஷ் தனது பெற்றோரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர் அரசிடம் உரிய அனுமதியும் பெற்றனர்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி ஹரிஷ் தனது தந்தை பரத்மோகன் மற்றும் 24 நீச்சல் வீரர்களுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை சென்றனர். பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கிய ஹரிஷ் மறு நாள் (7-ந்தேதி) காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.

    28 கிலோமீட்டர் தொலைவை சுமார் 11 மணி நேரம் 52 வினாடிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். அரிச்சல் முனை வந்தடைந்த மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

    அப்போது சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோரும் இயலாமை என்பதை இயலும் என்று மாற்றிக்காட்டி சாதனை படைத்த ஹரிசை கைதட்டி வரவேற்று பாராட்டினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
    • பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

    இதனால், பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

    இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

    இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×