என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு
Byமாலை மலர்7 Aug 2018 5:23 AM GMT (Updated: 7 Aug 2018 5:23 AM GMT)
பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
சென்னை:
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரகுராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிர்மலா மற்றும் அவரது மகன் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாடனின் மகன் காசி, மகள் ஆனந்தி இருவரும் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.
திருவாரூர் திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் பாண்டவையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியும், மதுரை கிழக்கு மதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முத்து வீரகணபதி மற்றும் வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விபத்துக்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரகுராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிர்மலா மற்றும் அவரது மகன் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாடனின் மகன் காசி, மகள் ஆனந்தி இருவரும் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.
திருவாரூர் திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் பாண்டவையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியும், மதுரை கிழக்கு மதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முத்து வீரகணபதி மற்றும் வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விபத்துக்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X