search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு
    X

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு

    சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான்சன் அலெக்ஸ்.

    நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்.

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பார்த்திபன்.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்லபாண்டி.

    ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மர்.

    சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காமராஜ்.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரகாந்த் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெய் சங்கர்.

    ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனராஜ்.

    கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தனபால்.

    நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்.

    மதுரை மாநகரம், கூடல் புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமாதேவி.

    ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

    விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேச பாண்டி.

    காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன்.

    நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம்.

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சதீஷ்வரன்.

    சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை1, ‘ஈ’ நிறுமம், 23ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    Next Story
    ×