search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric pole"

    • ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளது.
    • பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, ஆபத்தான நிலையிலும் இருந்து வருகிறது. விளாத்திகுளத்தின் பிரதான சாலையாக விளங்கி வரும் மதுரை ரோட்டில், அம்பாள் நகர் ஆர்ச் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் அருகில், பெருநாழி விலக்கு அருகில் என வரிசையாக பல மின்கம்பங்கள் காலாவதியாகி எப்போதும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது.
    • மின்சார கம்பிகள் மீது விழுந்தது.

    உடுமலை  :

    மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் தனியார் இடத்தில் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது. பிரமாண்டமாக வளர்ந்து இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் மின்சார வாள் மூலம் அறுக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெட்டப்பட்ட பெரிய மரக்கிளை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பிகள் மீது விழுந்தது. கிளையின் எடை அதிகமாக இருந்ததால் பாரம் தாங்காமல் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து நரசிங்காபுரத்திலிருந்து கருப்புசாமி புதூர் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதையடுத்து மரத்தை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. மின்கம்பம் விழுந்த போது சாலையில் யாரும் செல்லாததாலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.விபத்து என்ற வகையில் சேதமடைந்த மின்கம்பங்களுக்கான செலவினங்களை மின்வாரியத்திற்கு செலுத்த சம்பந்தப்பட்ட நபர் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் தெரிவித்து உடனே மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மரங்களை வெட்டும்போது உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் வெட்ட வேண்டும் என மின்வாரியத்தினர் வலியுறுத்தினர்.

    • இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
    • இதனால் மாற்று வழியில் 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்த மாவடி மணல்மேட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது எல்லைரோட்டையும் -சடச்சி கச்சல் சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.

    சாலையின் நடுவே இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்ற வாகனங்கள் என அனைத்தும் மாற்றுவழியில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் சாலை பணியையும் மேற்கொள்ள முடியாமல் மணல் சாலையாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை உக்கடம் கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர்கள் அனஸ் (20), ஹபீஸ் (19), சிஹாப் (20), சன்சார் (20), சுகைல் (19), ஆசீர் (18), அரபாஸ் (19), இப்ராஹிம் (20). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

    நண்பர்கள் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனையடுத்து காரில் நண்பர்கள் அனைவரும் ஊட்டி சென்றனர். காரை இப்ராஹிம் ஓட்டி சென்றார். ஊட்டி-குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த நண்பர்கள் மீண்டும் இன்று அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்தது. கார் மின்கம்பத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
    • பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 18 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மாநகராட்சி குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    • சாய்ந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது.
    • அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைக்கவுண்டன்வலசு பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சாய்ந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

    பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
    • பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.

    உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது. இது பற்றி பக்கத்தில் உள்ளவர்கள் உடனடி யாக மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்த னர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியருக்கு நன்றி கூறினர்.

    • மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.

    விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    சேரன்மகாதேவியில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தினமும் பரபரப்பாக காணப்படும் இடத்தில் மிகவும் பழுதடைந்த ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. 

    இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×