search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pokline machine"

    • குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
    • பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 18 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மாநகராட்சி குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    ×