search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டை"

    • சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.

    தகராறு

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

    வழக்கு

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×