search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொக்லைன் எந்திரம்"

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சேம்பர் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உதவி புவியியலாளர் கவுதமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.

    அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.
    • மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக மானாவாரி நிலங்களில் அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாய பணிகள் மேற்கொள்வது தற்போது கடினமாக மாறி உள்ளது. தண்ணீர் இல்லாததால் நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், காய்ந்து கருகும் பயிர்களை, பாதுகாக்க விவசாயிகள் கிணறு தோண்டி அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளும் முறைகளுக்கு மாறி வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிணறு தோண்டுவதற்கு பல மாதங்கள் ஆகும். அதன் பின்னர் கிணற்றில் ஊற்று தண்ணீர் தேங்கி அந்த கிணற்றிலிருந்து நீரேற்றும் முறை மூலம் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஒரு கிணறு தோண்டு வதற்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அதிகளவிலான நாட்களும் பணமும் செலவாகும். அதன்பிறகு ஆயில் என்ஜின் வைத்து, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டனர். இதில் நாட்கள் மட்டுமே குறைந்தது. தற்போதைய சூழலில் கிணறு தோண்டுவது போன்ற கடினமான பணிகளுக்கு கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்ட விவசாயிகள் சிறிய ரக பொக்லைன் மற்றும் கிரேன் என நவீன எந்திரங்களின் உதவியால் விரைவாகவும், குறைந்த செலவில் விவசாய கிணறு ளை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பழைய கிணறுகளிலும் இந்த சிறிய ரக பொக்லைன் எந்திரங்களை இறக்கிவிட்டு கிணறுகளை ஆழப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதற்கு இரண்டு இயந்திரங்கள், இரண்டு ஆட்கள் இருந்தால் போதுமானது.

    ஆட்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய இந்த எந்திரங்கள் பெரிதும் உதவி வருவதாகவும், ஆட்கள் மூலம் ஒரு கிணறு வெட்டும் போது ஒரு நாளைக்கு இரண்டு அடி மட்டுமே வெட்ட முடியும்.

    மேலும் 40 முதல் 50 அடி ஆழம் வரை கிணறு வெட்டுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு மேலாகும். அதேப்போல் பணம் ரூ.5 முதல் 6 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் இந்த நவீன சிறிய ரக பொக்லின் எந்திரத்தில் ஒரு நாளைக்கு 6 அடி முதல் 10 அடி வரை கிணறு வெட்ட முடியும். மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    இந்த எந்திரங்களுக்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு தலா ரூ.7000 ஆகிறது. இந்த இரண்டு வாகனங்களுக்கும் ரூ.14,000 செலவாகிறது. இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.

    மேல் மட்டத்தில் உள்ள மண்ணை தோண்டுவதில் இருந்து அடிமட்டம் வரை மண் பறிக்கும் நவீன எந்திரம் தனது பணியை செய்ய, மேலே ஒரு எந்திரம் இயக்கப்பட்டு கீழ் இருக்கும் மண் மற்றும் கற்களை மேலே எடுத்து வந்து கொட்டுகிறது.

    இந்த முறையில் கிணறு வெட்டுவதால், பணம், நேரம் குறைவாகிறது. மேலும் கூலியாட்கள் தேவை இல்லை என்பதால், தற்போது தருமபுரி மாவட்ட த்தில் தருமபுரி அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகமாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மத்தியிலும் இந்த எந்திரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் சாலை அமைப்பது, பெரிய பாலங்கள் கட்டுவது, பெரிய தொழிற்சாலைகள் அமைப்பது எனஅனைத் திலும் நவீன எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன் தரும் கிணறுகள் வெட்டுவதிலும் இந்த எந்திரங்களை பயன்பாடு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும் வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் கிணறு வெட்டும் பணி கிடைப்பதால், எந்திர உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    • சேகர் (வயது 50) இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது.
    • சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சித்ர மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50).

    இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.

    பொக்லைன் எந்திரத்தை டிரைவர் சஞ்சீவி என்பவர் இயக்கி, கிணற்றை சுற்றியிருந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றிக் ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்தது.

    அப்போது, டிரைவர் சஞ்சீவி மரக்கிளையை தாவி பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது.

    • திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
    • சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்ப டையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில் 2 ஆம்னி வேன்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது கண்ட றியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்தில் நிறுத்தி வைத்தனர்.

    மேலும் 4 ஆண்டுகளாக வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஒரு கனரக வாகனமும் கண்டறியப்பட்டு, ரூ.50 ஆயிரம் வரி செலுத்தவும், ரூ.25 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கவும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இதுபோன்ற வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறினார்.

    • குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
    • பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 18 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மாநகராட்சி குடிநீர் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    • விவசாயிகள் திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என்றனர்.
    • இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அம்மாபேட்டை வட்டத்தில் நெடுந்தெரு பகுதியில் தேவரா யன்பேட்டை வாய்க்கால், காவளூர் பகுதியில் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் வெட்டாற்றை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

    அப்போது கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 1068 கி.மீ. நீளத்துக்கு 189 பணிகள் தூர்வாருவதற்காக எடுத்து கொள்ளப்பட்டது. இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவைகேற்ப பொக்லைன் எந்திரங்கள் அதிகரிக்கப்படும்.

    மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியா ளர்கள் செல்வபாரதி, சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே-கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    கதவணை கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையார் பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த பொக்லைன் எந்திரம் மூலம் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்குள் மேடு, பள்ளம் தெரியவில்லை.

    இந்த நிலையில் ராஜேஷ் தண்ணீருக்குள் உள்ள மணல்களை அள்ளிக் கொண்டு சென்ற போது காவிரி ஆற்றுக்குள் பள்ளம் இருப்பது தெரியாமல் பொக்லைன் எந்திரம் நகர்ந்த போது பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. பொக்லைன் எந்திரத்தில் ஏசி பொருத்தப் பட்டி ருந்ததால் டிரை வரின் இருக்கை சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் ராஜேஷ் தப்பி வெளியே வர முடியவில்லை. பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்த அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து உடனடியாக அருகாமையில் பணியாற்றி வந்த ஜே.சி.பி எந்திரத்தை வரவழைத்தனர்.

    ஜே.சி.பி எந்திரம் வந்து பொக்லைன் எந்திரத்தை தூக்கி நிறுத்திய போது அதன் டிரைவர் ராஜேஷ் அவரது இருக்கையில் இருந்து வெளியில் வரும் முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. ராஜேஷின் உடலை மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ராஜேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ராஜேஷ் உடலை பார்த்த அவரது மனைவி மோகனா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஷின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த வளவனூர் பகுதியில் பாலாற்று படுகையில் மணல் அள்ள அரசு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாலாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையிலான பொதுமக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி, பொக் லைன் எந்திரத்தை சிறை பிடித்து முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

    குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் மணல் அள்ளக்கூடாது. மீறி மணல் எடுத்தால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொக் லைன் எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றது.
    • செல்லும்போதே டிராக்டர்சக்கரம் கழன்று ஓடியது.

    கடலூர்:

    விழுப்புரம்மாவட்டம்திருவெண்ணைநல்லூர்பகுதியில் இருந்து, நேற்று மாலை, நெல்லிக்குப்பம் ஆலைக்கு, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றுகொண்டு இருந்தது டிராக்டரைசுரேஷ் ஓட்டிவந்தார். பண்ருட்டிலிங்க் ரோடு செவன்த் டே பள்ளி முன்பு செல்லும்போது டிராக்டர்சக்கரம்கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் டிராக்டர் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்த படி நின்றது. அப்போது அந்த வழியாகவந்தபயணிகள் அலறியடித்து ஓடினர்.

    கழன்ற சக்கரம் சிறிது தூரம் ஓடி விழுந்தது. இதனால்அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. டிராக்டரை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. அப்போது நடுரோட்டில் டிராக்டர் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் பாலாஜி சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்றுவாகனங்களை மாற்று வழியாக திருப்பி விடப்பட்டனர்.பின்பு ஜெசிபி இயந்திரத்தை வரவழைத்து டிராக்டரை அப்புறப்படுத்தினர்.

    • ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நைனா குப்பம் ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விழுப்புரம் உதவி புவியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக ஊழியருடன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்தார். அப்போது அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்து பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பி விட்டனர். அவற்ைற எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×