search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bagline machine"

    • டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றது.
    • செல்லும்போதே டிராக்டர்சக்கரம் கழன்று ஓடியது.

    கடலூர்:

    விழுப்புரம்மாவட்டம்திருவெண்ணைநல்லூர்பகுதியில் இருந்து, நேற்று மாலை, நெல்லிக்குப்பம் ஆலைக்கு, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பண்ருட்டி வழியாக சென்றுகொண்டு இருந்தது டிராக்டரைசுரேஷ் ஓட்டிவந்தார். பண்ருட்டிலிங்க் ரோடு செவன்த் டே பள்ளி முன்பு செல்லும்போது டிராக்டர்சக்கரம்கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் டிராக்டர் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்த படி நின்றது. அப்போது அந்த வழியாகவந்தபயணிகள் அலறியடித்து ஓடினர்.

    கழன்ற சக்கரம் சிறிது தூரம் ஓடி விழுந்தது. இதனால்அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. டிராக்டரை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. அப்போது நடுரோட்டில் டிராக்டர் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் பாலாஜி சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்றுவாகனங்களை மாற்று வழியாக திருப்பி விடப்பட்டனர்.பின்பு ஜெசிபி இயந்திரத்தை வரவழைத்து டிராக்டரை அப்புறப்படுத்தினர்.

    • ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர்.
    • இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற் குட்பட்ட வடக்கநந்தல், நயினார்பாளையம் என மூன்று வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 70-க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சின்ன சேலம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம் தகரை கள்ளநத்தம், குரால், வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை கரடிசித்தூர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர். மேலும் இந்த திருட்டு இரவு முதல் அதிகாலை வரை நடக்கிறது. இந்ததிருட்டை தடுக்க வேண்டிய வருவாய் துறையும் இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தி கிராவல் மண் மற்றும் செம்மண் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது கடுமையான ந டவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×