search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி அருகே கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    X

    பரமத்தி அருகே கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

    • நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சேம்பர் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உதவி புவியியலாளர் கவுதமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×